மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் அதனுடன் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். எனவே இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும் தங்களது இணையதளமான www.licindia.in மூலமாகவும் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பைச் செய்வதற்கான சேவையினை வழங்கியுள்ளது.
பண மோசடி சட்டம் 2017-ன் கீழ் காப்பீடு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு என்பது கட்டாயம் என்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமும் கூறியுள்ளது.
அறிவிப்பு
எல்ஐசி நிறுவனம் தாங்கள் எஸ்எம்எஸ் சேவை மூலம் ஆதார் இணைப்பினை வழங்குவதாகச் சமுக வலைதளங்களில் பரவி வரும் சேவை குறித்த விவரங்கள் தவறானது என்றும் இணையதளம் மூலமாகவோ அல்லது எல்ஐசி மினி ஆப்பிஸ் மற்றும் எல்ஐசி கிளைகள் மூலமாக மட்டுமே இணைப்பைச் செய்யவும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே எல்ஐசி இணையதளம் மூலமாகப் பாசியுடன் ஆதார் கார்டினை எப்படி இணைப்பது என்று விளக்கமாகப் பார்ப்போம்.
தேவையானவை
எல்ஐசி பாலிசியுடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முதலில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் எல்ஐசி பாலிசி விவரங்களைக் கைகளில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
எல்ஐசி இணையதளம்
www.licindia.in என்ற இணையதளத்திற்குச் சென்று ‘ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக இனைப்பு' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
மொபைல் எண்
உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள எல்ஐசி கிளையின் மூலம் இணைப்பைச் செய்யவும். இணையதளம் மூலமாக இணைப்பினை செய்ய ஆதார் கார்டுடன் மொபைல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒரு முறை கடவுச் சொல் மூலமாக இணைப்புச் சாத்தியம் ஆகும்.
தொடர்தல்
மேலே கூறிய விவரங்கள் எல்லாம் சரியாக இருப்பின் ‘தொடர்க' என்ற பொத்தானை அழுத்தவும்.
விண்ணப்பம்
தொடர்க பொத்தானை அழுத்திய பிறகு உங்களுக்குத் தோன்றும் விண்ணப்பித்தன பூர்த்திச் செய்து எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் ஒரு முறை கடவுச்சொல்லை எல்லாம் அளித்த பிறகு வெற்றிகரமாக இணைப்பு முடிந்துவிடும். இதனை உறுதி செய்ய எல்ஐசி நிறுவனம் சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications