பிபிஐயின் காலக்கெடு எப்போது?

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிபிஐ கோருதல் செய்வதற்கான பிபிஐ காலக்கெடு 29 ஆகஸ்ட் 2019 ஆகும். ஆனால் ஒரு சரியான கோருதலுடன் இருப்பவர் உடனடியாக செயல்படுவது நல்லது அல்லது வாய்ப்பை தவறவிடும் அபாயம் உண்டு.

 

பிபிஐ கோரிக்கை காலக்கெடு 29 ஆகஸ்ட் 2019 என நிதி நடத்தை ஆணையம் நிர்ணயித்துள்ளது.

அந்த காலக்கெடு ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், சரியான கோருதல் உள்ளவர்கள் உடனடியாக கோருவது நல்லது.

பெரும்பாலான மக்கள் கடைசி நிமிடத்தில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோருதல் தேக்கம் அடைய வாய்ப்புகள் அதிகம். காலக்கெடு நெருங்கும் வேளையில் இது பெரும் தாமதங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் வெற்றிகரமான கோருதலை பலர் இழக்க நேரிடும்.

மேலும், பிபிஐயை தவறாக விற்பனை செய்யப்பட்ட பலருக்கு காலக்கெடு விரைவில் நெருங்குகிறது.

ஆனால் அதைப் பற்றி மேலும் விவரிப்பதற்கு முன்னர், நாம் ஒரு படி பின்னே சென்று பிபிஐ விற்பனை தடை செய்யப்பட என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்.

கட்டணப் பாதுகாப்பு காப்பீடு (PPI) என்றால் என்ன?

கட்டணப் பாதுகாப்பு காப்பீடு (PPI) என்றால் என்ன?

பிபிஐ என்பது காப்பீடு திட்டமாகும். அடமானக் கடன், கடன் அட்டை மற்றும் கடன் போன்ற பல கடன் உடன்படிக்கைகளுடன் விற்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கையாகும்.

அதன் நோக்கம், விபத்து அல்லது நீங்கள் உங்கள் வேலையை இழந்தால், நீங்கள் சம்பாதிக்க முடியாவிட்டால், காப்பீடானது உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் என்பதாகும்.

 

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

பிரச்சனை என்னவென்றால் பல மக்களுக்கு கடனுடன் பிபிஐ விற்பனை செய்யப்பட்டதே தெரியவில்லை. மேலும் அவர்கள் ஒத்துக்கொள்ளாத காப்பீட்டுக்காக பணம் செலுத்த வேண்டியிருந்தது.

காப்பீடு விற்பனை செய்யப்பட்ட மக்களுக்கும் அதை கோருவதில் பிரச்னை எழுந்தது. சுய வேலைவாய்ப்பு, முன்பே உள்ள மருத்துவ நிலைமைகள் போன்ற பல்வேறு காரணங்களால் கோருதலில் தடை உண்டானது.

 

பிபிஐ காலக்கெடு எப்போது?
 

பிபிஐ காலக்கெடு எப்போது?

எப்சிஏ 29 ஆகஸ்ட் 2019 என்று பிபிஐ கோருதல் மீது காலக்கெடுவை அறிமுகப்படுத்தியுள்ளது.

நான் முன்பே என் கோருதலை ஏன் செய்ய வேண்டும்?

நான் முன்பே என் கோருதலை ஏன் செய்ய வேண்டும்?

2013 மற்றும் 2015 இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் நிறுவனங்கள் 5.5 மில்லியன் மக்களுக்கு அவர்கள் பிபிஐ தவறாக விற்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அபாயத்தில் உள்ளதாகவும், அவர்களை கோருதல் செய்ய அறிவுறுத்தியுள்ளன.

அந்த கடிதங்கள் மக்கள் தங்கள் கோருதலைப் பெற கடிதத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்று எச்சரித்தார். எப்சிஏவும் அந்த காலக்கெடுவே செல்லும் என கூறியுள்ளது.

எனவே, நீங்கள் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தால், ஏற்கனவே ஒரு பிபிஐ கோருதல் பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் அல்லது உங்கள் காலக்கெடு நெருங்குகிறது.

உங்களுக்கு கடிதம் கிடைத்திருக்காவிட்டால், உங்களுக்கு பிபிஐ-ஐ தவறாக விற்ற நிறுவனத்தை தொடர்புக்கு கொண்டு உங்களுக்கு கடிதம் அனுப்பினார்களா என கேட்கவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ppi பிபிஐ
English summary

When is the PPI Deadline?

When is the PPI Deadline?
Story first published: Friday, January 12, 2018, 11:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X