மூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்..!

By Balalatha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வு பெறுதல் என்பது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டமாகும். நீங்கள் ஊதியம் பெறும் நபராக இருந்தாலோ அல்லது சுய தொழில் செய்பவராக இருந்தாலோ சரி, நம்மில் ஒவ்வொருவரும் தற்போதைய பணிபுரியும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து வெளியே வர விரும்புகிறோம்.

நீங்கள் சம்பளம் வாங்கும் தனி நபராக இருந்தால் ஓய்வூதியம் அல்லது ஆண்டுத் தொகை நிதிகளைப் பெறுவீா்கள். மேலும் நீங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதியப் பலன்களான பணிக்கொடை, விடுமுறை பணமாக்கல், போனஸ் போன்றவற்றைப் பெறலாம்.

ஓய்வூதிய நிதிகளைத் திரட்டுதல், பணி ஓய்வு காலத் திட்டமிடுதலின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். "ஓய்வூதிய நிதிகள்" மற்றும் "செலவுத் தேவைகள்" 'ஐ பொறுத்து ஒருவர் போதுமான அளவு வருமானத்தை உருவாக்க நிதிப் பகிர்தலை செய்ய வேண்டும்.

பணி ஓய்வு பெற்றவர்கள் அல்லது மூத்த குடிமக்கள் உத்திரவாதமளிக்கப்பட்ட வழக்கமான வருமானத்தைப் பெற ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்வதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு அல்லது சேமிப்புத் தோ்வுகள் :

 அஞ்சல் அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ.-யின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்)

அஞ்சல் அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ.-யின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்)

இதில் காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படுகிறது. வட்டியானது அதே அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கிலோ அல்லது எஸ்.பி.ஐ. வங்கியின் சேமிப்புக் கணக்கிலோ வரவு வைக்கப்படுகிறது. மேலும் எஸ்.பி.எஸ்.எஸ். திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணம் பிரிவு 80 சியின் கீழ் தள்ளுபடியை பெறும் தகுதியை பெறுகிறது.

எஸ்.சி.எஸ்.எஸ். கணக்கில் அதிகபட்ச தொகை

எஸ்.சி.எஸ்.எஸ். கணக்கில் அதிகபட்ச தொகை

எஸ்.சி.எஸ்.எஸ். கணக்கில் ஒருவா் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.15 இலட்சம் ஆகும். (வாழ்க்கைத் துணைவருடன் வங்கி கூட்டு கணக்கு). இந்த 15 இலட்சம் வரையறையைக் கடந்து வர ஒருவா் வெவ்வேறு வங்கிகளில் பல எஸ்.சி.எஸ்.எஸ். கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம். எஸ்.சி.எஸ்.எஸ். திட்டத்தில் ஒரு மிகப்பெரிய அனுகூலம் இருக்கிறது.
ஐ.பி.ஒ. 'ஆல் ஆண்டுக்கு 8.4% வட்டி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள வேறு எந்த இதர மாதாந்திர வருமானத் திட்டங்களை விட அதிகமானதாகும்.

நிரந்தர வைப்புநிதிகள் (எஃப்.டி)

நிரந்தர வைப்புநிதிகள் (எஃப்.டி)

இந்தத் திட்டமானதுது ஒருவா் அதிக அளவில் அபாயத்தை எடுக்காமல் மாதாந்திர வருமானத்தை ஈட்ட அனுமதிக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோ்ந்த வட்டி சேமிப்புக்கணக்கில் வரவில் வைக்கப்படுகிறது. நாம் நிரந்தர வைப்பு நிதிக்கணக்கில் அனைத்து ஓய்வூதியப் பணத்தையும் தனிப்பட்ட முறையில் பூட்ட முடியும். ஆனால், நிரந்தர வைப்புநிதியில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தத் திட்டத்தில் ஈட்டப்படும் எல்லா வட்டித் தொகையும் வரி விதிப்புக்குட்பட்டது, எனவே உங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதிய நிதியில் குறைந்தபட்சம் 16% தொகையை எஃப்.டி.யில் முதலீடு செய்யுங்கள்.

அஞ்சல் அலுவலக - மாதாந்திர வருமான திட்டம் (எம்.ஐ.எஸ்)

அஞ்சல் அலுவலக - மாதாந்திர வருமான திட்டம் (எம்.ஐ.எஸ்)

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் ஓய்வு பெற்ற மக்களுக்கு மாதாந்திர வருமானத்தை உருவாக்கும் ஒரு மிகுந்த பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.6% ஆகும்.
ஆனால், எம்.எஸ். அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் உள்ள மிகப்பெரிய கட்டுப்பாடு என்னவென்றால், ஒருவேளை கூட்டுக்கணக்காக இருந்தால் (வாழ்க்கைத் துணைவருடன்) முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.9 இலட்சமாகும். தனிக் கணக்கிற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.4.5 இலட்சமாகும். 7.6% வட்டியில் ரூ.9 இலட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 5,700 மாதாந்திர வருமானத்தை உருவாக்க முடியும்.

எம்.ஐ.எஸ், பி.ஓ. - எம்.ஐ.எஸ். திட்டங்களின் வரையறைகள் எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் ஓய்வு பெற்ற மக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதையே பரிசீலிக்கிறார்கள். ஏனென்றால், இந்தத் திட்டம் அவா்களுடைய ஓய்வூதியப் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான அவா்களுடைய விருப்பத்துக்குரிய தோ்வுகளில் ஒன்றாகும்.

 

பரஸ்பர நிதிகளின் மாதாந்திர வருமான திட்டம் (எம்.எஃப். - எம்.ஐ.பி.)

பரஸ்பர நிதிகளின் மாதாந்திர வருமான திட்டம் (எம்.எஃப். - எம்.ஐ.பி.)

எம்.எஃப். - எம்.ஐ.பி. திட்டத்தில் வழக்கமான வருமானத்தை உருவாக்க ஓய்வு பெற்ற நபா்கள் பங்கு ஆதாயத் தோ்வு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வளா்ச்சித் தோ்வு திட்டத்தில் அல்ல. மற்ற எல்லா மாதாந்திர வருமான திட்டங்களோடு ஒப்பிடும்போது பரஸ்பர நிதிகளின் எம்.ஐ.பி. திட்டத்தில் வழங்கப்படும் வருவாய்ச் சிறந்ததாக இருக்கிறது. ஒரு நல்ல பரஸ்பர நிதிகளின் எம்.ஐ.பி. திட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 8.2% வருடாந்திர பங்கு ஆதாயத்தை ஈட்ட முடியும்.

எம்.எஃப். எம்.ஐ.பி திட்டத்தைச் சிறந்த தோ்வாகக் கருதுவதற்கான காரணம்:

எம்.எஃப். எம்.ஐ.பி திட்டத்தைச் சிறந்த தோ்வாகக் கருதுவதற்கான காரணம்:

1. சில நேரங்களில் ஒரு நல்ல எம்.எஃப் - எம்.ஐ.பி. திட்டம் அதிகபட்ச வருவாயை ஈட்டும். (ஆண்டுக்கு 8.2% விட அதிகமாக).

சில சமயம் எம்.எஃப். எம்.ஐ.பி. திட்டம் ஆண்டுக்கு 9% வருவாயைக் கூட ஈட்டுவதை நாம் இணையத் தளத்தில் பார்க்கிறோம். இதன் அா்த்தம் என்னவென்றால் எம்.எஃப் - எம்.ஐ.பி. திட்டத்திற்கு உயா்ந்த வருவாயை உருவாக்கும் திறன் இருக்கிறது என்பதேயாகும். (டி.டி.டி.யின் நிகரத் தொகை).

2. எம்.எஃப் -. எம்.ஐ.பி. திட்டத்தில் மற்றொரு நன்மையும் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவரை பங்கு சந்தையிலும் சிறிய அளவில் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. முதலீட்டுப் பன்முகத் தன்மை என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது நல்லதாகும்.

 

பிரதான் மந்திரி வய வதன யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்.)

பிரதான் மந்திரி வய வதன யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்.)

பி.எம்.வி.வி.ஒய். என்பதும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். பி.எம்.வி.வி.ஒய். திட்டத்தில் உறுயளிக்கப்பட்ட வருவாய் 8% ஆகும். இந்தப் பாலிசியின் காலம் 10 வருடங்கள் ஆகும். பாலசிதாரர் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியப் பணம் செலுத்தும் முறையைத் தோ்ந்தெடுக்கலாம்.

பாலிசி வருடங்கள் நிறைவடைந்த பிறகு பாலிசியின் கொள்முதல் விலையில் 75% வரை கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். கடன் மீதான வட்டி உங்கள் ஓய்வூதியத் தொகையில் இருந்து திரும்பப் பெறப்படும்.

2018-2019 நிதியாண்டு பட்ஜெட்டின் படி மாதாந்திர ஓய்வுத் தொகையாக ரூ.10 ஆயிரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அதிகப் பட்ச முதலீட்டுத் தொகை ரூ. 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 பங்கு சந்தையை அடிப்படையாகக் கொண்ட சமச்சீா் பரஸ்பர நிதிகள்

பங்கு சந்தையை அடிப்படையாகக் கொண்ட சமச்சீா் பரஸ்பர நிதிகள்

ஒரு ஓய்வு பெற்ற நபருக்கு மூலதனத்தை அதிகரிப்பது என்பது முன்னுரிமை இல்லையென்றாலும் அந்த வசதியையும் இந்தத் திட்டம் வைத்திருப்பது நன்மையானதாக இருக்கிறது. அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்ற ஆா்வம் உடையவா்களைத் திருப்திப்படுத்த இந்த வசதி செய்யப் பட்டுள்ளது.

நிறைவு

நிறைவு

நமது சேமிப்பை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். சேமிப்பை பாதுகாத்தல் என்பதன் பொருள் அதை முதலீடு செய்வது என்பதேயாகும், மாறாகச் சேமிப்பை சேமிப்புக் கணக்கில் வெறுமனே வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு முதலீடு செய்யவில்லை என்றால் உங்கள் பணம் தேவையில்லாமல் செலவழிக்கப்படும். நிதிகளைப் பல்வேறு திட்டங்களில் பகிர்ந்து முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகும். (குறைந்த அபாயம், தேவைக்குப் போதுமான அளவு வருவாய்) இத்தகைய திட்டங்கள் ஒரு ஓய்வு பெற்ற நபருக்கு அதிக நிம்மதியை அளிக்கிறது.

முதலீடு செய்வதற்கு முன் பல்வேறு திட்டங்களில் உள்ள வரிவிதிப்புகளை நினைவில் கொள்ளுங்கள். இது நீங்கள் மேலும் சிறப்பாக வரித் திட்டங்களை வகுக்க உங்களுக்கு உதவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Lump sum Investment for Retirees Senior Citizens

Best Lump sum Investment for Retirees Senior Citizens
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X