தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான் இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் நாம் வேலை செய்யும்போது நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பிஎஃப் (pf) கணக்கில் பங்களிப்பாக செய்து விடுவார்கள்.
அதே போல நாம் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் நமக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். ஒவ்வொரு மாதமும் இந்த தொகை நம்முடைய pf கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இப்படி நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பணி ஓய்வு பெற்ற பின்னர் தான் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது.

ஏதேனும் ஒரு அவசர பண தேவை ஏற்படுகிறது என்றாலும் விண்ணப்பம் செய்து ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் எடுத்து பயன்படுத்த முடியும். அவ்வப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் உங்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் நிறுவனம் சார்பாக பங்களிப்பு செய்ய வேண்டிய தொகையும் வரவு வைக்கப்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.
அந்த வகையில் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை ஒரு எஸ்எம்எஸ் வாயிலாகவே மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். உங்களுடைய பிஎஃப் கணக்கோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து பின் வரக்கூடிய முறையில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். EPFOHO UAN ENG என்ற முறையில் இந்த 7738299899 எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
உதாரணமாக உங்களின் யுஏஎன் நம்பர் 12345678910 என வைத்து கொள்வோம் , உங்களுக்கு விருப்பமான மொழி ஆங்கிலம் என வைத்து கொள்வோம், அப்படி என்றால் நீங்கள் EPFOHO 12345678910 ENG என 7738299899 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய உடனே பிஎப் அமைப்பு உங்களுக்கு உங்களுடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரத்தை எஸ்எம்எஸ் வாயிலாகவே உங்களுக்கு அனுப்பி வைத்து விடும். இதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் கூட தேவைப்படாது. அடுத்ததாக உங்களுடைய மொபைல் ஃபோனில் மிஸ்டு கால் வாயிலாகவும் நம் பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் ஒரு ரிங்கிலேயே கால் கட்டாகிவிடும். இதனை அடுத்து உங்களுடைய ரிஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் முறையில் உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று விவரம் தெரிய வந்துவிடும்.
இல்லை என்றால் உங்களுடைய ஃபோனில் Umang செயலி பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இபிஎப்ஓ என கிளிக் செய்து பாஸ்புக் என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய யுஏஎன் நம்பரை உள்ளீடு செய்தால் உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்க நகை வாங்குவோருக்கு அரசு எச்சரிக்கை!! இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்!!

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!



Click it and Unblock the Notifications