இன்று இந்தியாவில் ஒரு குழந்தை பிறப்பது முதல் முதியவர்களின் ஓய்வூதியம் வரை அனைத்திற்கும் ஆதார் அவசியமான ஒன்றாக உள்ளது. வங்கி கணக்கு, சிம் கார்டு, ரேஷன் என ஒவ்வொரு இடத்திலும் ஆதாரை பயன்படுத்தும் நாம், அதில் உள்ள சிறு தவறுகளை திருத்த முற்படும்போது தான் பல சவால்களை சந்திக்கிறோம்.
நினைத்த நேரத்தில் உங்கள் பெயரை மாற்றவோ, பிறந்த தேதியை திருத்தவோ முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சில முக்கிய விவரங்களை மாற்ற வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கிறது. அந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் கவனக்குறைவாக தவறவிட்டால், அரசு சலுகைகள் முதல் பாஸ்போர்ட் எடுப்பது, பள்ளிக்கூடங்கள் வரை பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதற்கெல்லாம் இந்த தடை? எவற்றை எத்தனை முறை மாற்றலாம்? எப்படி ஆதாரை புதுப்பிப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதி அளித்தாலும், சில முக்கியமான விவரங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை என்ற கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
பிறந்த தேதி - ஒருமுறை மட்டுமே!
ஆதார் எடுக்கும் போது உங்கள் பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை திருத்த உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். அதற்கு முறையான பிறப்பு சான்றிதழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வயது சான்று ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். ஆதாரமற்ற கோரிக்கைகளை UIDAI நிராகரித்து விடும்.
பாலினம் (Gender) - ஒரு முறை மட்டுமே!
ஆதார் வைத்திருப்பவர் தனது பாலின விவரத்தை தவறாக பதிவு செய்திருந்தால், அதை திருத்திக்கொள்ள ஒரு முறை மட்டுமே அனுமதி உண்டு. இந்த திருத்தத்திற்கு பிறகு, மீண்டும் மாற்றம் செய்ய பொதுவான விதிகளின்படி அனுமதி கிடையாது.
மற்ற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?
உங்கள் பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். இதே உங்களுடைய முகவரி & மொபைல் எண்: உங்கள் வீடு மாறும்போதோ அல்லது புதிய சிம் கார்டு வாங்கும்போதோ எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு தடையில்லை.
விரல் ரேகைகள், கண் கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் (குறிப்பாக குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் இது கட்டாயம்).
ஒருவேளை இந்த ஒரு வாய்ப்பையும் தாண்டி நீங்கள் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நீங்கள் UIDAI-ன் மண்டல அலுவலகத்தை நேரடியாக அணுகி, சிறப்பு அனுமதி பெற வேண்டியிருக்கும். இது மிகவும் கடினமான நடைமுறை என்பதால், முதல் முறையே சரியாக செய்வது அவசியம்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications
