இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.
இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது . தற்போது இந்த மருத்துவ காப்பீடு தொகையை ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் . அதறகென சில நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன .அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் .

மத்திய அரசு தகுதியுள்ள குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆண்டு தோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேரக்கூடிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டு என்பது வழங்கப்படுகிறது . குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இந்த கார்டை காண்பித்து இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இது இணைத்து வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் தங்களுடைய ரேஷன் அட்டை அடிப்படையிலும் தங்களுடைய குடும்ப வருமானத்தின் அடிப்படையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பெற்று இருக்க வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு கடுமையான நோய்களுக்கும் இந்த காப்பீடு அட்டை மூலம் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் . புற்று நோய்கள் தொடங்கி பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையும் இலவசமாக பெற முடிகிறது.
உங்களுடைய குடும்பத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களுடைய ஆயுஷ்மான் பாரத் அட்டையில் ஓர் ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு தொகையை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தனியாக ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குகிறது.
உங்கள் வீட்டில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் கார்டு இருந்தால் உங்கள் வீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கிறார்கள் எனும் போது ஏற்கனவே இருக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டையை டாப் அப் செய்து மொத்தம் 10 லட்சம் ரூபாயாக உங்களுடைய காப்பீட்டை அப்கிரேட் செய்து கொள்ள முடியும். அந்த முதியவரின் ஆதாரை கொண்டு கேஒய்சி சரிபார்ப்பை முடித்தாலே அப்கிரேடு ஆகிவிடும். ஆயுஷ்மான் பாரத் அட்டை இல்லாத குடும்பங்களை சேர்ந்த முதியவர்கள் தனியாக தான் அட்டை பெற்று கொள்ள முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications