நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ எண்ணிலடங்கா சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகின்றது.
அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில அம்சங்களை உருவாக்கியுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் இன்னும் எளிதாக வங்கி சேவையினை பெற முடியும். அந்த வகையில் தற்போது எஸ்பிஐ தனது வங்கி சேவைகளில், இனி யுபிஐ சேவையினை பெற முடியும் என அறிவித்துள்ளது.
யுபிஐ ஆக்டிவேஷன்
இதனை அதன் ஆன்லைன் வங்கி சேவையின் மூலமாகவோ அல்லது யோனோ எஸ்பிஐ மூலமாகவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆக வாடிக்கையாளர்கள் இந்த சேவையினை பெற்று மகிழுங்கள் என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
எப்படி ஆக்டிவேட் செய்வது?
எஸ்பிஐயின் இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தங்களது யுபிஐ புரஃபைல் பகுதியினை அப்டேட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு யுபிஐ சேவைக்கான Enable or Disable என்ற ஆப்சன் இருக்கும். ஆக அதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது மொபைல் நம்பரை கொடுத்து அப்டேட் செய்யவும்.
யுபிஐ ஆப்
எஸ்பிஐ பே என்பது வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் வழியாக, பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய மிக எளிய ஆப்சனாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதில் விர்சுவல் பேமெண்ட் முகவரியை தவிர, வேறு விவரங்கள் தேவையில்லை.
மொபைல் போன் வழியாக பணம் அனுப்பலாம்
கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் எஸ்பிஐயின் இந்த சேவையானது, மிக எளிதாக பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இந்த யுபிஐ சேவையானது ஒருவரின் மொபைல் போன் வழியாக, ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு உடனடியான பணத்தினை அனுப்ப பயன்படுகிறது.
24 மணி நேரமும் சேவை
இது மொபைல்போன் வழியாக மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் 24 மணி நேரமும் நாம் சேவையினை பெற முடியும். இதனை தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) வழி நடத்துகிறது. இது இந்திய வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் ஆதரிக்கப்படும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications