இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் ஏதேனும் பொருட்களை வாங்கினால்.. உங்களின் சார்பாக வங்கிகள் பணத்தைச் செலுத்தும். அதன் பின்னர் நீங்கள் வங்கிக்கு வட்டியுடன் பணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல் என்றால் அதற்கு வசூலிக்கப்படும் வட்டி. மற்ற கடன்களை விட கிரெடிட் கார்டு கடன்களுக்கு வட்டி அதிகம். கிரெடிட் கார்டு பயனர்கள் வட்டி தொகையை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்றால் என்ன?: கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்பது ஏபிஆர் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்வதற்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டித் தொகை இதுவாகும். இந்த வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மேலும் நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டின் வகையைப் பொருத்தும் மாறுபடும்.
எனவே நீங்கள் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்தாமல் இருந்தால் நிலுவைத் தொகையின் மீது தினசரி அடிப்படையில் வட்டி விதிக்கப்படும். உதாரணமாக ரூ.10,000 நிலுவைத் தொகைக்கு 18 சதவீதம் ஏபிஆர் விகிதம் இருந்தால் மாத வட்டி தோராயமாக 1.5 சதவீதமாக இருக்கும். ரூ. 10,000-த்திற்கு 150 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு வட்டி எப்போது வசூலிக்கப்படும்?: உங்கள் கிரெடிட் கார்டு ரிப்போர்ட் உருவாக்கப்பட்டவுடன் வட்டி வசூலிக்கப்படும். அதோடு நீங்கள் கடன் வாங்கிய தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். உரிய தேதிக்குள் முழு நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தாமல் இருந்தால் நிலுவைத் தொகைக்கும் சேர்த்து வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
சிலர் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு பில் வரும்போது குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்திக்கொண்டே வருவார்கள். அப்படி இருந்தால் மீதமுள்ள தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். உதாரணமாக ஒரு மாதத்திற்கான உங்கள் கிரெடிட் கார்டு பில் 10,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.
குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூ.1,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் மீதமுள்ள 9,000 ரூபாய்க்கு வட்டி சேரத் தொடங்கும். எனவே உங்கள் கிரெடிட் கார்டு பில் அடுத்த மாதம் வரும்போது ரூ.9000 + வட்டி தொகை கணக்கிடப்பட்டு வந்திருக்கும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் முழு நிலுவை தொகையையும் செலுத்த வேண்டும்.
சிலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுக்கின்றனர். இதை செய்வதனால் பரிவர்த்தனை நடந்த நாளில் இருந்து வட்டி வசூலிக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கும் நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வட்டி இல்லா காலம் இருக்கும். அப்போது நீங்கள் செலவு செய்து விட்டு வட்டியே இல்லாமல் வங்கிக்கு கடனை திருப்பிச் செலுத்தலாம். ஆனால் நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் அந்த சலுகை காலம் முடிவு பெறாமல் இருந்தாலும் அன்றைய நாளிலிருந்து வட்டி வசூலிக்கப்படும்.
வட்டியைச் சேமிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: முடிந்த வரையில் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்ச தொகையை செலுத்துவதை தவிர்த்து பழகுங்கள். பில்லிங் சைக்கிள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். முன்னதாக பணம் செலுத்துவது தேவையின்றி கட்டணம் செலுத்துவதையும் வட்டி தொகையையும் குறைக்க உதவும். கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதனாளும் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படலாம். அதுவும் சலுகைகாலம் முடிவதற்குள் இத்தகைய சுமையில் சிக்காமல் இருக்க ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும். குறைந்த ஏபிஆர் உள்ள கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது, வட்டி சேமிக்க உதவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications