சென்னை: இந்தியாவில் ஊதியதாரர்களுக்கு ஓய்வு காலத்தில் ஒரு கணிசமான தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் epfo திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாம் மாதந்தோறும் செய்யக்கூடிய பங்களிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதிய திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனை தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் என அழைக்கிறார்கள். ஒரு நபர் எவ்வளவு தொகையை ஓய்வூதியமாக பெற முடியும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தில் பணி செய்யக்கூடிய ஊழியர் தன்னுடைய அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் தொகையை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்கிறார். இந்த தொகை நேரடியாக பிஎஃப் கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே அளவிலான தொகையை அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் அந்த ஊழியரின் பெயரில் வரவு வைக்கும். இதில் 8.3 சதவீத தொகை ஓய்வூதிய திட்டத்திற்காக சென்று விடும். மீதமுள்ள 3.6 சதவீத தொகை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு நபர் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் கணிசமான தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டும் என விரும்பினால் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் மேலே கூறிய விகிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை பிஎஃப் கணக்கிலும் குறிப்பிட்டதொகை ஓய்வூதிய திட்டத்திற்கும் பிரித்து வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு நபருக்கு எவ்வளவு ஓய்வூதியம் பி எஃப் கணக்கிலிருந்து கிடைக்கும் என்பதை நாம் தற்போது கணக்கிடலாம்.
இபிஎஸ் ஓய்வூதியம் = சராசரி ஊதியம் x ஓய்வுக்கான சேவை காலம் / 70 (EPS Pension = (Average Salary × Pensionable Service) ÷ 70)
சராசரி ஊதியம் என்பது கடந்த 12 மாதங்களில் அவர் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது .
ஓய்வுக்கான சேவை காலம் என்பது அதிகபட்சம் 35 ஆண்டுகள் ஆகும்.
எனவே ஒரு நபரின் சம்பளம் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் என வைத்து கொள்வோம், அவர் வேலை செய்த காலம் 35 ஆண்டுகள் என வைத்து கணக்கிடலாம்.
ஓய்வூதியம் = (15,000 × 35) ÷ 70 = ₹7,500 மாதந்தோறும்.
எனவே இந்த ஃபார்முலாவின் அடிப்படையில் பார்க்கும் போது, அதிகபட்சம் 7,500 ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும். ஒரு நபர் தனக்கு 58 வயது ஆன பிறகு இந்த ஓய்வூதிய தொகையை மாதாந்திரமாக பெற்றுக்கொள்ள முடியும்.
Story Written by: Devika
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications