தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கும் மிக முக்கியமான ஒரு ஆவணமாக ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன . மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தொடங்கி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாக ரேஷன் கார்டை தான் பயன்படுத்துகிறார்கள்.
ரேஷன் கார்டினை பொருத்தவரை தற்போது பெரும்பாலான சேவைகளை நம்மால் ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடிகிறது. உதாரணமாக புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்வது , புது ரேஷன் அட்டைக்கான விண்ணப்பத்தின் நிலை அறிவது, ரேஷன் அட்டையில் புதிதாக ஒரு உறுப்பினரை சேர்ப்பது , ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது , குடும்பத் தலைவர் மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினரின் பெயரை நீக்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நாம் நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய செல்போன் அல்லது கம்ப்யூட்டர் வாயிலாகவே மேற்கொண்டு விட முடிகிறது.

தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 34 ,808 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மொத்தம் 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன இதன் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டில் மிக எளிதாக புதிதாக ஒரு உறுப்பினரின் பெயரை நம்மால் சேர்த்து விட முடியும். அது எப்படி என்பதை இதில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து ரேஷன் அட்டையோடு இணைக்கப்பட்டுள்ள 10 இலக்க கைபேசி எண்ணை அதில் உள்ளிட வேண்டும் . இதனை உள்ளீடு செய்தவுடன் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.

இதனை அடுத்து குடும்ப உறுப்பினரை சேர்ப்பதற்காக பக்கம் தோன்றும், அதில் குறிப்பிட்ட அந்த குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும். அதேபோல பிறந்த தேதி ,குடும்ப தலைவரோடு அவருக்கு என்ன உறவு , பாலினம் , எந்த ஆவணத்தை அடையாள ஆவணமாக பதிவேற்றம் செய்யப் போகிறீர்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை அதில் உள்ளிட வேண்டும்.
இதனை அடுத்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஒரு குறுந்தகவல். வரும் அதில் நீங்கள் என்ன விண்ணப்பத்தை அனுப்பினீர்கள், அதை அந்த விண்ணப்பத்திற்கான ரெஃபரன்ஸ் நம்பர் உள்ளிடவை இடம் பெற்றிருக்கும். அந்த மெசேஜை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னால் உங்களின் இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா குறிப்பிட்ட அந்த நபரின் பெயர் சேர்க்கப்பட்டதா இல்லையா என்பதை நாம் ஆன்லைனில் சரி பார்த்துக்கொள்ள இந்த எண் என்பது மிகவும் கட்டாயம்.
குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்குள்ளாகவே அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து உறுப்பினரின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்த்து விடுவார்கள் . இவ்வாறு கூடுதலாக ஒரு உறுப்பினர் சேரும்போது உங்களுக்கு ரேஷன் கடையில் அரிசி சர்க்கரை உள்ளிடவை கூடுதலாக கிடைக்கும்.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications