இலவச மருத்துவ சிகிச்சைக்கு அரசு தரும் ரூ.5 லட்சம்! நீங்கள் தகுதியுடையவரா? தெரிந்து கொள்வது எப்படி?

எந்த ஒரு அரசாங்க திட்டம் ஆனாலும் சரி.. அதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவையற்ற தடைகள் எதுவும் இல்லாமல் அந்த குறிப்பிட்ட திட்டத்திலிருந்து பயனடைய முடியும். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா? என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்றால் என்ன?: ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார திட்டமாகும். இது மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது. இந்த நன்மையைப் பெற தனி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தின் நன்மைகள் அனைவருக்கும் கிடைத்துவிடாது. குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் நன்மை கிடைக்கும். இந்த கார்டை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

 இலவச மருத்துவ சிகிச்சைக்கு அரசு தரும் ரூ.5 லட்சம்! நீங்கள் தகுதியுடையவரா? தெரிந்து கொள்வது எப்படி?

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவிற்கான தகுதியை எவ்வாறு சரிபார்ப்பது?: ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவரா? என்பதைச் சரிபார்க்க வேண்டும். தகுதிப் பட்டியலின் கீழ் வருபவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்: கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

அமைப்புசாரா தொழிலாளர்கள்: தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தனிநபர்கள் ABY திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர்: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) தகுதி பெறுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்: ஊனமுற்ற நபர்கள் அல்லது ஊனமுற்ற குடும்ப உறுப்பினரைக் கொண்டவர்களும் தகுதியுடையவர்கள்.

ஆதரவற்றோர்: நீங்கள் பழங்குடியினர் அல்லது ஆதரவற்ற சமூகங்களைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஆயுஷ்மான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?: உங்கள் மாநிலத்தின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லவும்.

உங்கள் அடையாளத்தை சரிபார்க்க, உங்கள் ஆதார் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை வழங்கவும். விண்ணப்பித்த பிறகு, நீங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பெறுவீர்கள், அதை நீங்கள் இலவச சுகாதார சேவைகளை பெற பயன்படுத்தலாம்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது தகுதியான நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான இலவச காப்பீட்டை வழங்குகிறது. நீங்கள் PBY திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக இருந்தால், ஆயுஷ்மான் கார்டைப் பெறுவது, பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையைப் பெறலாம்.

ஆயுஷ்மான் கார்டு பெற தகுதியை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?: முதலில் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PMJAY இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். ஹோம் பேஜில், 'Am I Eligible' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகுதியைச் சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். "14555" என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+