பேப்பர் இல்லாத ஆன்லைன் ஆதார் கார்டினை, ஆஃப்லைனில் தங்களது KYC பயன்பாட்டிற்காக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
இந்த சேவையை ஆதார் கார்டு வைத்துள்ள அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதெல்லாம் சரி இதனை எப்படி பயன்படுத்துவது? எப்படி பேப்பர் இல்லாத இ-கேஒய்சி ஆவணமாக உருவாக்குவது.
இ-ஆதாரினை எப்படி பெறுவது?
ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் மூலம் உங்கள் இ-ஆதாரினை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் https://resident.uidai.gov.in/offline-kyc என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
இங்கு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல நம்பர், ஆதார் நம்பரை கொடுத்து, அதனுடன் கேப்ட்சா நம்பரையும் பதிவிடவும். இதன் பிறகு ஓடிபி கொடுத்து அப்டேட் செய்யவும்.
ஓடிபியை பயன்படுத்தி ஜிப் பார்மேட்டில் ஆதாரினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பாஸ்வேர்டு பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்த XML ஜிப் பார்மேட்டினை உங்களது மொபைல் அல்லது வேறு ஏதேனும் டிவைகளில் சேமிக்கலாம்.
இ-ஆதார் எப்படி ஆஃப்லைனில் பயன்படுத்தலாம்
இ-ஆதார், பிசிகலாக ஆதார் அட்டையின் புகைப்பட ஆவணத்தினை சமர்பிக்க வேண்டிய அவசியத்தினை குறைக்கிறது. அதற்கு பதிலாக அவர்கள் கே.ஓய்.சி ஆவணத்திற்காக, ஜிப் பார்மேட்டில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள KYC XML ஆவணத்தினை கொடுக்கலாம்.
XML என்னும் மெஷின் லேர்னிங் பார்மேட்டில் இருப்பதால் அதனை ஆவணமாக எடுத்துக் கொள்ளும்.
என்னென்ன விவரங்கள் இருக்கும்?
நீங்கள் ஆதார் இ-கேஓய்சி ஆவணத்தினை XML பார்மேட்டில் பதிவு இறக்கம் செய்யும்போது என்னென்ன விவரங்கள் இருக்கும்.
கார்டு ஹோல்டரின் பெயர்
குறிப்பு எண்
முகவரி
புகைப்படம்
பாலினம்
பிறந்த தேதி
மொபைல் எண்
மின்னஞ்சல் ஐடி என பல விவரங்களும் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது?
இன்றைய காலகட்டத்தில் அரசின் முக்கிய பணிகள், வங்கி கணக்கு தொடங்குவது முதல், வருமான வரி செலுத்தும் வரை அனைத்து இடங்களிலும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இப்படி ஜிப் பார்மேட்டில் இருப்பது மிக நல்ல விஷயமே. எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.