இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கிறது. நம்முடைய அனைத்து விதமான நிதி பரிவர்த்தனைகளையும் பான் எண் இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி, கடன் பெறுவது, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது என அனைத்திற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டால் அதற்கு மாற்றாக டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்து பெற முடியும். ஆன்லைனிலேயே இதற்கான விண்ணப்பத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் அது எப்படி என்பதை தான் நம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம் .

முதலில் https://onlineservices.proteantech.in/paam/ReprintEPan.html என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே சென்றவுடன் உங்களுடைய பான் நம்பர் கேட்கப்படும். பான் நம்பர், அதனை தொடர்ந்து ஆதார் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு சப்மிட் செய்யப்பட்ட பிறகு பான் கார்டினை பெற கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இருப்பவர்கள் 50 ரூபாயும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் 959 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை யுபிஐ ,டெபிட் கார்டு, அல்லது கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம். தொடர்ந்து உங்களுக்கான ஒரு அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் கிடைக்கும். அந்த 15 இலக்க கொண்ட அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும்.
நம்முடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை பரிசோதனை செய்து கொள்ள இந்த 15 இலக்க அக்னாலஜ்மெண்ட் நம்பர் அவசியம் என்பதால் அதனை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து 15 லிருந்து 20 நாட்களுக்குள் டூப்ளிகேட் பான் கார்டு நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு கொரியர் முறையில் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
அதே சமயம் உங்களுக்கு ஈ பான் கார்டு வேண்டும் என்றால் https://www.onlineservices.proteantech.in/paam/requestAndDownloadEPAN.html இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் பான் நம்பர், அதனை தொடர்ந்து ஆதார் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்த மாதம் மற்றும் வருடத்தை உள்ளிட வேண்டும். இதனை தொடர்ந்து கீழே இருக்கக்கூடிய பாக்ஸை டிக் செய்து சப்மிட் செய்ய வேண்டும். உங்களின் பான் கார்டினை பிடிஎஃப் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய பான் கார்டு காணாமல் போயிருக்கிறது என்றால் அது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. எனவே அருகில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கொள்வது நல்லது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications