டெல்லி: பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் பயன்படுத்தி வரும் பான் கார்டுகளை ஆன்லைன் வாயிலாகவே நாம் புதிய பான் கார்டுகளாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் பல்வேறு சேவைகளையும் மத்திய அரசு நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்து டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு பான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நாம் நம்முடைய பான் கார்டுகளை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பான் 2.0 திட்டத்தின் மூலம் புதிய பான் கார்டை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய பான் கார்டில் க்யூஆர் கோடு இடம்பெற்றிருக்கும். அது தவிர நம்முடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் இதில் பராமரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாம் இலவசமாக புதிய பான் கார்டு பெறலாம்.
இதற்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும். பான் கார்டு தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் க்யூ ஆர் கோடு இடம்பெற்றிருக்கும் என்பதால் ஒருவருடைய தகவல்களை திருடுவது கடினமானதாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதனால் நம்முடைய பான் எண் மற்றும் பான் கார்டை கொண்டு நடத்தப்படக்கூடிய மோசடிகள் அனைத்தும் தடுக்கப்படும். ஒரு நபருடைய பெயரில் போலியான பான் கார்டுகள் உருவாக்குவது கடினம் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பு நிறைந்தது என அரசு கூறுகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பழைய பான் கார்டுகளை புதுப்பித்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியா - சீனா உறவு.. கலர் மாறுதே.. சீன பிராண்டுகள் பரபரன்னு வேலை பார்க்குறாங்களே..!
- இதற்கு NSDL இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- விவரங்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சப்மிட் செய்ய வேண்டும்.
- இதனை அடுத்து உங்களின் விவரங்களை சரிபார்த்து இணையதளம் மீண்டும் காண்பிக்கும்.
- இப்போது சரிபார்ப்பினை அங்கீகரிக்க ஓடிபி கேட்கப்படும். உங்களுக்கு வந்த ஓடிபியை நீங்கள் உள்ளிட வேண்டும்.
- Agree to the terms and conditions என்பதை கிளிக் செய்தால் அடுத்த 15 நிமிடங்களில் உங்களின் புதிய பான் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும்.
- பான் அட்டையாக வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினால் 15 நாட்களில் புதிய பான் கார்டு வீடு தேடி வரும்.
- NSDL க்கு மாற்றாக UTIITSL இணையதளத்திற்கு கூட செல்லலாம். அதிலும் மேலே கூறிய நடைமுறைகளே பின்பற்றப்படும்.
Story Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications