அடமானம் வைப்பதற்கு நம்மிடம் எந்த ஒரு பொருளும் இல்லாத சூழலில் வங்கிகளில் கடன் பெறுவதற்கு நமக்கு உதவுபவை பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள். இத்தகைய தனிநபர் கடன்கள் மூலம் நாம் எந்த ஒரு பொருளையும் அடமானம் வைக்காமல் குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற முடியும்.
ஆனால் மற்ற கடன்களை விட தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நாம் தனிநபர் கடன்களை வாங்கி இருந்தால் பெருமளவில் வரி விலக்கு கிடைக்கிறது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடன்களை பொறுத்தவரை அந்த கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். அதாவது வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 b-யின் கீழ் ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காக தனிநபர் கடன் எடுத்து இருக்கிறீர்கள் என்றால் ஓர் நிதியாண்டில் நீங்கள் ரூ.30,000 வரை இந்த கடனுக்காக செலுத்திய வட்டி தொகையில் வருமான வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வேளை நீங்கள் வெளிநாட்டில் சென்று மேற்படிப்பினை படிப்பதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால், இதற்காக நீங்கள் செலுத்திய மொத்த வட்டி தொகைக்குமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.
தனி நபர் கடன் வாங்கி உங்களது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்தி இருந்தால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 36(1)(iii) -யின் கீழ் நீங்கள் வரி விலக்கு கோர முடியும். அதாவது உங்களுடைய தொழிலுக்கு தேவையான ஒரு சிறப்பு உபகரணத்தையோ அல்லது இயந்திரத்தையோ வாங்குவதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால் இந்த கடனுக்காக நீங்கள் செலுத்திய மொத்த வட்டி தொகைக்குமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.
உங்களது வீட்டில் கூடுதலாக ஒரு அறையை கட்டுவதற்கோ அல்லது புனரமைப்பு செய்வதற்கோ தனிநபர் கடன் வாங்கினால் அதற்கும் வரி விலக்கு கிடைக்கும். வருமானவரி சட்டத்தின் பிரிவு 24 b-யின் கீழ், இந்த வரி சலுகையை பெறலாம்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது அதில் நீங்கள் கூடுதலாக ஒரு அறையை சேர்க்கிறீர்கள் அல்லது உங்க வீட்டு மாடியில் ஒரு அறையை கட்டுகிறீர்கள் என்ற பட்சத்தில், அதற்காக தனி நபர் கடன் வாங்கி இருந்தால் அதற்கு செலுத்தக்கூடிய வட்டிக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை நீங்கள் செலுத்தும் வட்டி தொகைக்கு வருமான வரி சலுகை கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications