தற்போது தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் கார்டுகளை ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கி வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, பழைய ரேஷன் கார்டுகளில் இருந்து ஸ்மார்ட் கார்டுக்கு மாறுவது, ரேஷன் கார்டு நிலையை சரி பார்ப்பது போன்ற அனைத்தையும் தமிழக மக்கள் தமிழ்நாடு அரசின் பொது விநியோக அமைப்பின் மூலம் எளிதாக ஆன்லைனில் செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைத்து வைத்துக் கொள்வது அவசியம்.
இதையும் ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும். அப்படி செய்து விட்டால் ரேஷன் கடைகளுக்கு செல்லாமலே ரேஷன் கடைகளில் இருக்கும் இருப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு 3 வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.லைட் கிரீன் கார்டுதாரர்கள் அரிசி மற்றும் பிற பொருட்களை நியாய விலைக் கடைகளில் பெறுகிறார்கள், மேலும் அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களும் இதில் அடங்குவர். வெள்ளை கார்டுதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கூடுதலாக 3 கிலோ சர்க்கரை கிடைக்கும். காக்கி நிற கார்டு காவல்துறை அதிகாரிகளுக்கான பிரத்தியேக கார்டு ஆகும்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைப்பதற்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று ஆன்லைனில் ரேஷன் கார்டுகளுடன் மொபைல் நம்பரைப் பதிவுசெய்து இணைக்கலாம்.
1967 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்தால் போன் நம்பர் மாற்றுவது குறித்த விபரங்களை கூறுவார்கள். அதேபோல் அருகில் உள்ள தாலுகா ஆபீஸ் அலுவலகத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையங்கள் இருக்கும். அங்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பரை ரேஷன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் செல்வதற்கு முன்பு குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குடும்பத் தலைவரின் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும்.
தாலுக்கா அலுவலகத்திற்கு செல்வது வீண் அலைச்சல் என்று நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவும் செய்து கொள்ளலாம். மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கு எந்த வித கட்டணமும் இல்லை. தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் பட்சத்தில் உங்களுடைய மொபைல் நம்பர் அதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யப்பட்டு.
ரேஷன் கார்டில் ஏன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்?: ரேஷன் கார்டுகளில் மொபைல் நம்பரை இணைப்பதன் மூலம் என்னென்ன பொருட்களை வாங்கி இருக்கிறீர்கள் என்ற விவரங்களை மெசேஜ்-ஆக பெற முடியும். இதனால் தான் குடும்ப தலைவரின் மொபைல் நம்பர் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே போல அரசின் ரேஷன் கார்டு மொபைல் அப்ளிகேஷனில் உள்நுழைவதற்கும் மொபைல் நம்பர் கட்டாயம் தேவை.
மொபைல் நம்பர் இல்லாவிட்டால் ரேஷன் கார்டு தொடர்பான எந்தவித அறிவிப்பையும் பெற முடியாது. அது மட்டுமின்றி ரேஷன் கார்டின் இருப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் இந்த மொபைல் நம்பர் உதவுகிறது. சில நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் இல்லை என்ற தெரிந்த பிறகு வீட்டிற்கு திரும்பி வரும் சூழல் ஏற்படலாம். மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்கும்போது உங்கள் மொபைலிலேயே எளிதாக என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்ற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications