உங்களுக்கே தெரியாம உங்க பேர்ல கடன் வாங்க முடியுமா? PAN கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. நம்முடைய அடையாள ஆவணங்களான பான் கார்டு , ஆதார் கார்டு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்கே தெரியாமல் நம்முடைய பெயரை பயன்படுத்தி நிறைய மோசடிகள் நடக்கின்றன. திடீரென அவை நமக்கு தெரிய வரும்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

இந்தியாவில் சமீப காலமாக பொதுமக்களின் பான் கார்டு தவறாக பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கடன் வாங்கக்கூடிய மோசடி நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கியில் இருந்து அழைப்பு வரும் போது அல்லது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது, கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்திருக்கும் போது தான் நமக்கே இந்த விஷயம் தெரிய வரும்.

உங்களுக்கே தெரியாம உங்க பேர்ல கடன் வாங்க முடியுமா? PAN கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

டிஜிட்டல் அடிப்படையிலான மோசடிகள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் உஷாராக இருந்து கொள்வதுதான் சாமர்த்தியம். உங்களுடைய அடையாள ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய பான் நம்பரை கொண்டு யாரேனும் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் கடன் வாங்கி இருக்கிறார்களா என்பதை நாம் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு மிக எளிமையான ஒரு வழி இருக்கிறது.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது நீங்கள் பரிசோதனை செய்தால் போதும். உங்களுடைய பான் கார்டு பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒவ்வொரு கடனும் உங்களுடைய கிரெடிட் வரலாற்றில் இருக்கும். தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் சில வகையிலான மைக்ரோ லோன்கள் ஆகிய அனைத்தும் கிரெடிட் வரலாற்றில் காட்டப்படும்.

உங்களுக்கே தெரியாம உங்க பேர்ல கடன் வாங்க முடியுமா? PAN கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் நமக்கான கிரெடிட் ஸ்கோர்களை இலவசமாகவே வழங்குகின்றன. எனவே உங்களின் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து பாருங்கள். CIBIL, Experian, Equifax போன்ற நிறுவனங்களின் இணையதளங்களில் உங்களுடைய பான் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டால் உங்களுக்கான கிரெடிட் அறிக்கை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அதில் உங்களுடைய பான் எண்ணை பயன்படுத்தி என்னென்ன களங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன, அவற்றில் எதெல்லாம் திரும்ப அடைக்கப்பட்டு இருக்கிறது என்ற விபரம் பட்டியலாக காட்டும். அதில் நீங்கள் வாங்காத கடன் இருக்கிறது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பெயரில் கடன் வாங்கப்பட்டு இருப்பது என்பதை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் தர வேண்டும்.

அதே போல சம்பந்தமே இல்லாமல் உங்களின் கிரெடிட் ஸ்கோரினை நிதி நிறுவனங்கள், வங்கிகள் பரிசோதனை செய்ததாக தெரிந்தாலும் உடனே கிரேடிட் ஸ்கோர் வழங்கிய நிறுவனத்திடமும் தொடர்புடைய வங்கியிடமும் புகார் தர வேண்டும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்து இருக்கிறதா என்பதை பாருங்கள் நீங்கள் சரியாக கடன்கள் அனைத்தையும் திரும்ப செலுத்தி இருக்கிறீர்கள், ஆனால் கிரெடிட் ஸ்கோர் மட்டும் குறைந்து இருக்கிறது என்றால் உங்களுடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது என அர்த்தம். இது தொடர்பாகவும் புகார் அளிப்பது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+