சில சமயங்களில் திடீரென வெளியூர் பயணம் செய்ய திட்டமிடும் போது பலர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வார்கள்.
டிக்கெட்டை முன்பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக உட்கார்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ ரயிலில் பயணம் செய்யலாம்.
இல்லை என்றால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கி பயணம் செய்ய வேண்டும். ஆங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறி அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் முறையை ரயில்வேஸ் அறிமுகம் செய்துள்ளது.
தட்கல் டிக்கெட்
முன்கூட்டியே திட்டமிடாமல் ரயில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் விற்கப்படும். ஆனால் அது ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பே தொடங்கப்படுவதால் கடைசி மணி நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை.
கரண்ட் டிக்கெட் புக்கிங்
வார நாட்களில் திட்டமிடாமல் ரயில் பயணம் செய்யும் போது கரண்ட் டிக்கெட் புக்கிங் மூலம் பயணம் செய்யலாம். ஆனால் இதுவும் வார இறுதி நாட்களில் கிடைப்பதில்லை.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் விதி
இந்நிலையில் இந்தியாவில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறிவிட்டு அதற்கான கட்டணம் செலுத்தும் முறை ஒன்று உள்ளது. இது குறித்து பலருக்கு தெரிவதில்லை. அந்த விதிகுறித்து இப்போது இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
பிளாட்பார்ம் டிக்கெட்
ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணத்தைத் தொடங்கலாம் என்றாலும் ரயில் நிலையம் பிளாட்பார்ம் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் கட்டாயம். முதலில் ரயில் நிலையம் பிளாட்பார்ம் டிக்கெட்டை எடுக்க வெண்டும்.
டிக்கெட் பரிசோதகர்
பிளாட்பார்ம் டிக்கெட் பயன்படுத்தி ரயிலுக்கு சென்ற உடன், ரயிலின் டிக்கெட் பரிசோதகரை சந்தித்து பிளாட்பார்ம் டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்வதற்கான டிக்கெட்டை டெபிட் கார்டு / ரொக்கப் பணம் செலுத்தி பெறலாம்.
சீட் இல்லை என்றால் என்ன ஆகும்?
டிக்கெட் இல்லாமல் செல்பவர்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அனுக வேண்டும். சீட் இருக்கிறது என்றால் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் வழங்குவார். இல்லை என்றால் அபராதம் 250 ரூபாய் மற்றும் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications