வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் எப்போது அவசரத் தேவைக்குப் பணம் வேண்டும் என்பது தெரிவதில்லை.
அவசரத் தேவைக்குப் பணத்தைச் சேமித்து வைக்கும் பழக்கமும் பெரும்பாலான இந்தியர்களிடம் இல்லை.
எனவே அவசர பணத்தேவை என்றால் இந்தியர்கள் முதலில் நாட்டுவது தங்க நகைக் கடன். தங்க நகை போன்றே குறைந்த வட்டி விகிதத்தில் ஆயுள் காப்பீடுத் திட்டங்கள் மூலமாகவும் கடன் பெறலாம்.
எப்படி?
பெரும்பலன் காப்பீடு நிறுவனங்கள் தங்களது பாலிசிதாரர்கள் 3 அல்லது 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து ப்ரீமியம் செலுத்திய பிறகு அவசரத் தேவைகளுக்குக் கடன் வழங்குகின்றன. அப்படி இல்லை என்றால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் பத்திரங்களை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் சமர்ப்பித்து அதன் மூலமாகவும் கடன் பெறலாம் எனக் கூறுகின்றனர்.
வட்டி விகிதம் எவ்வளவு?
ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராகக் கடன் பெறும் போது அது நீங்கள் வாங்கும் கடனை செலுத்த இருக்கும் கால அளவை பொருத்தது. நீங்கள் நீண்ட காலத் தவணையில் கடன் பெறும் போது வட்டி விகிதம் குறைவாக இருக்கும். குறைந்தது இந்த வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். தனிநபர் கடன் திட்டங்களை விட இந்த காப்பீடு திட்டங்களின் வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும் எனக் கூறுகின்றனர்.
கடனை செலுத்துவது எப்படி?
ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராகக் கடன் பெற்ற பிறகு அதனை பிரீமியம் தொகையுடன் சேர்த்து செலுத்தி அடைக்கலாம். ஆனால் கடன் பெற்றக் கால்லெடுவில் சரியாக அதனைச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நீங்கச் செலுத்திய ப்ரீமியம் தொகையிலிருந்து பணத்தைப் பிடித்துக்கொண்டு மீத ப்ரீமியம் தொகையை இன்சூரன்ஸ்ன் நிறுவனம் திருப்பி வழங்கி விடும்.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
ஆயுள் காப்பீடு திட்டங்கள் எதிராகக் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் உங்களது காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். கடன் பெறும் போது உங்கள் பாலிசியின் விவரங்கள், ஆதார நகல், வங்கி காசோலை போன்றவை தேவைப்படும். நீங்கள் வழங்கும் வங்கி காசோலையின் கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்.
பிக்சட் டெபாசிட் கடன்
இதே போன்று வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மூலம் பணம் சேமித்து வந்தாலும், அதை நீங்கள் இடையில் உடைக்க விரும்பாவிட்டால், அதன் மூலமாகவும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications