சென்னை: சென்னை வாகன ஓட்டிகளுக்கு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மிக முக்கியமான ஒரு அப்டேட்டை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அது தொடர்பான விவரங்களை வாகன் மற்றும் சாரதி போர்ட்டல்களில் பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். இவ்வாறு பதிவு செய்து வைத்திருப்பவர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை மாற்றும் போது இந்த தளங்களில் அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
பொதுவாக இதுபோல நம்முடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான மொபைல் எண்ணை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் வாகன் மற்றும் சாரதி ஆகிய இணையதளங்கள் வாயிலாகவே எளிதாக தங்களுடைய மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள பதிவில், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை வாகன் மற்றும் சாரதி போர்ட்டல்களில் புதுப்பிக்க புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர். இங்கே காட்டப்பட்டுள்ள கியூஆர் கோடினை உங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் போதும் வாகன் மற்றும் சாரதி தளங்களுக்கு சென்று விடும் என கூறியுள்ளனர்.
மேலும் அதற்கான இணையதள லிங்குகளையும் எக்ஸ் தள பதிவிலேயே குறிப்பிட்டிருக்கின்றனர். https://vahan.parivahan.gov.in/mobileupdate/ மற்றும் https://sarathi.parivahan.gov.in ஆகிய இரண்டு லிங்குகளை கிளிக் செய்து வாகன ஓட்டிகள் தங்களுடைய மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ள முடியும். இதில் வாகன் தளத்தில் மொபைல் எண்ணை அப்டேட் செய்யும் போது உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதி , வாகன பதிவு எண், சேசிஸ் எண் மற்றும் என்ஜின் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அவற்றை உள்ளீடு செய்த பின்னர் மொபைல் எண்ணை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக சாரதி தளத்திற்கு செல்லும் போது முதலில் உங்களுடைய மாநிலம் குறித்த விவரம் கேட்கும். அதில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஓபன் ஆகும் பக்கத்தில் மொபைல் நம்பர் அப்டேட் என்பதை கிளிக் செய்து நாம் மொபைக் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய ஆதார் எண் விவரங்கள் கேட்கப்படும் . ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications