சென்னை: 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக இலவச சான்றிதழ் படிப்புகளை படிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. இதுவரை 2 படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அதனை 10 ஆக உயர்த்தி ஐஐடி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இருக்கும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடி வழங்கக்கூடிய இந்த இணைய வழி படிப்புகளில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னை ஐஐடி நிர்வாகம் ஸ்கூல் கனெக்ட் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போதைக்கு இந்த திட்டத்தின் கீழ் டேட்டா சயின்ஸ் & ஏஐ , எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இரண்டு படிப்புகளை தான் வழங்கி வந்தது. தற்போது அத்துடன் கூடுதலாக 8 படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

எட்டு வாரங்கள் கொண்டதாக இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் https://code.iitm.ac.in/schoolconnect/ இந்த இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இருந்த டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகியவற்றோடு சேர்த்து இந்த முறை ஆர்க்கிடெக்சர் மற்றும் டிசைன் , இன்ஜினியரிங் பயாலஜிக்கல் சிஸ்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பாடங்கள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி .காமகோடி இந்த படிப்புகள் வளர்ந்து வரும் துறைகளைப் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டும் என்றும் இந்த வகுப்புகளில் சேர்ந்த பயில கூடிய மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய கண்டுபிடிப்பாளர்களாக உருவாக இவை உதவும் என்றும் தெரிவித்திருக்கிறார். பள்ளிக்கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான இடைவெளிகளை குறைக்கும் நோக்கத்துடனே ஐஐடி சென்னை சான்றிதழ் படிப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார். மாணவர்கள் இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அனைவரும் பயன்பெற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த பயிற்சி திட்டங்களில் சேர்ந்து பயில்வதன் மூலம் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலேயே இந்த பாடங்களுக்கான அறிமுகங்களை பெறும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் தாங்கள் எந்த பிரிவில் செல்லலாம், எந்த பிரிவில் எதிர்காலம் இருக்கிறது புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவது உள்ளிட்ட தெளிவுடன் முடிவெடுக்க முடியும். இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் வகுப்புகளை கவனிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு அசைன்மென்ட் மற்றும் ப்ராஜெக்ட் உள்ளிட்டவையும் வழங்கப்படுவதால் பயிற்சியுடன் கூடிய அனுபவமாக இது இருக்கும்.
ஒரு ஆண்டுக்கு மூன்று வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி, ஆகஸ்ட் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலும் வகுப்புகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டுக்கு மூன்று படிப்புகளில் சேர்ந்து பயில முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications