பெங்களூரில் சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் மெட்ரோ இணைப்பு பெற இருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் சிக்கி இருக்கும் நிலையில் இது மெட்ரோ சேவை பெரிய தீர்வாக அமையும்.
சர்ஜாபூரில் இருந்து ஹெப்பல் வரை கோரமங்களா மற்றும் மெஹ்கிரி சர்க்கிள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைப்பதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூருக்குள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து பணிக்கு செல்வோர் பயனடைய இருக்கின்றனர்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் இந்த திட்டத்தின் மதிப்பீடு 28,450 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை அனுமதி தந்துள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ரயில் பாதை ஆனது மொத்தம் 36 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். 28 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதில் அடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் உயர்மட்ட பாதையில் 22 . 14 கிலோமீட்டர் ரயில் பாதையாகவும் , சுரங்கமாக 14.45 கிலோமீட்டர் பாதையும் அமைக்கப்படும். உயர்மட்ட பாதையில் 17 ரயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 11 நிலையங்களும் இருக்கும்.
மத்திய அரசு அதிகாரிகள் இந்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அனுமதி தந்த உடன் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனுமதி கிடைத்த விடும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பொது மக்களுக்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளன. எனவே சர்ஜாபூர் முதல் ஹெப்பல் வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பது மிக அவசியமானது என மக்கள் தரப்பிலும் வரவேற்பு காணப்படுகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications