சந்தை சரிவில் இருக்கும் போது நல்ல ஃபண்டுகளின் என் ஏவி குறைந்திருந்தாலும் வாங்கி வைக்கலாம். ஏனெனில் அதன் மூலம் கூடுதல் யூனிட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பணத்தினை ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல், பலவிதமான ஃபண்டுகளில் பிரிச்சு முதலீடு செய்யலாம். இதனால் ரிஸ்கும் குறையும். ஏனெனில் ஒரு ஃபண்டில் லாபம் கிடைக்காவிட்டாலும், மற்ற ஃபண்டுகள் லாபம் கொடுக்கலாம். இதனால் ரிஸ்கும் குறையும். கணிசமான வருவாயும் கிடைக்கும்.

எதற்காகவும் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மியூச்சுவல் ஃபண்டு மட்டும் அல்ல, வேறு எந்த வகையான முதலீடுகளையும் கடனை வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.
எல்லாவற்றையும் விட எந்த ஃபண்டில் எல்லாம் முதலீடு செய்யாலாம் என பலரிடம் ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். ஆனால் இறுதி முடிவு என்பது உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். யாரையும் சார்ந்து அவர் சொன்னார், இவர் சொன்னார் என முதலீடு செய்யக்கூடாது.
இன்றைய காலகட்டத்தில் இதனை பற்றி தெரிந்து கொள்ள நிறைய வழிகள் உள்ளன. ஆன்லைனிலேயே நிறைய படிக்கலாம். பல நிறுவனங்கள் இலவச வகுப்புகளையும் நடத்துகின்றன. நிறைய புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் எக்காரணத்தினைக் கொண்டும், யாரோ சொன்னார்கள் என, எதுவும் தெரியாமல் முதலீட்டினை செய்யாதீர்கள்.
புதியவர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சரிவை சந்திக்கும் திட்டங்களிலிருந்து தப்பிக்க இத்தகைய நடைமுறை அவசியம். ஏனெனில் எந்த துறையானது எப்போது சரிவினைக் காணும் என்று ஓரளவுக்கு கணித்து சொல்வார்கள்.
ஒரு ஃபண்டில் முதலீடு செய்கிறோம். அது தொடர்ந்து பல மாதங்கள் வரை, எவ்வித முன்னேற்றமும் இல்லை எனில், அதனை வேறு நல்ல ஃபண்டிற்கு மாற்றுவது நல்லது. சொல்லப்போனால் அது புத்திசாலிதனமும் கூட.
அவசர தேவைகளுக்கு வைத்திருக்கும் பணத்தினை எக்காரணம் கொண்டும், முதலீடு செய்ய கூடாது.
நீங்கள் முதலீடு செய்வது என்பது நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் அதனை முதலீடு செய்யும் போது ஒன்று பல முறை யோசித்து, இது சரியான முதலீடு தானா? என்பதையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications