நம் வாழ்க்கையில் அன்புக்குரியவர்களை இழப்பது என்பது மிகவும் வேதனையானது . அதுவும் தந்தை அல்லது தாயை இழப்பது என்பது வாழ்நாள் முழுவதும் நீங்காத வேதனையை தரக்கூடியது . இத்தகைய சூழலில் இறந்த பெற்றோர் வங்கியில் வாங்கி இருக்கக் கூடிய கடன்களின் சுமை திடீரென உங்கள் மீது விழுந்தால் அது உங்களுக்கு நிதி ரீதியாக இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெற்றோர் வங்கியில் வாங்கிய கடனை மகன் அல்லது மகள் அல்லது சட்டபூர்வ வாரிசாக இருப்பவர்கள் கட்டாயம் திரும்ப செலுத்த வேண்டுமா, வங்கிகள் உங்களிடம் வந்து இந்த கடனை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும் என கூற முடியுமா என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம் .

வங்கிகளில் ஒரு நபர் கடன் வாங்கி இறந்துவிட்டார் எனும் போது அந்த கடன் அவருடைய மனைவி அல்லது குழந்தைகளுக்கு மாற்றப்படுவதில்லை . இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அது நடக்கும் . வங்கிகள் நீங்கள் கடனை செலுத்தியாக வேண்டும் என கூறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும் . எனவே உங்கள் பெற்றோர் வங்கியில் வாங்கக்கூடிய கடன் உங்கள் மீது விழுகிறதா , இல்லையா என்பதை நாம் தற்போது விரிவாக பார்க்கலாம் .
பெற்றோர் வாங்கிய கடன் சுமை பிள்ளைகள் மீது விழுவது என்பது வெவ்வேறு சூழ்நிலைகளை பொறுத்து மாறுபடும். உதாரணமாக வங்கிகள் கடன் தொகையை வசூலிக்கும் முயற்சி ஒரு பகுதியாக உங்களுக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறது எனக் கூறி உங்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற விரும்பலாம். ஆனால் சட்டத்தின் அப்படி எந்த ஒரு அதிகார வரம்பும் கிடையாது . சில சமயங்களில் மட்டுமே பெற்றோர் வங்கியில் வாங்கிய கடனை நீங்கள் திரும்ப அடைக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
இறந்த பெற்றோரிடமிருந்து வாரிசுகள் அதாவது மகன் அல்லது மகள் ஏதேனும் சொத்துக்களை வாரிசு உரிமையாக பெற்று இருந்தால் , அந்த சொத்தின் மதிப்பிற்கு உட்பட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. பெற்றோரிடமிருந்து எந்த சொத்தும் வாரிசுகளுக்கு வரவில்லை என்றால் வாரிசுகள் தங்கள் சொந்த பணத்தையோ அல்லது தங்கள் சொந்த சொத்தையோ, சம்பாத்தியத்தையோ கொண்டு கடனை அடைக்கத் தேவையில்லை. வங்கிகள அவ்வாறு அவர்களை வற்புறுத்தவும் முடியாது.
வீடு, கார் , தங்கம் போன்ற பொருட்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அதனை திரும்ப அடைக்காமல் இருந்தால் வங்கிகள் அந்த பொருட்களை ஏலத்தில் விட்டு பணத்தை சட்டப்படி வசூல் செய்து கொள்ளலாம். இல்லை எங்களுக்கு அந்த வீடோ, காரோ ,தங்க நகையோ தேவை எனும்போது வாரிசுகள் கடனை திரும்ப செலுத்தி அந்த பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய பெற்றோர் கடன் வாங்கும் போது நீங்கள் கூட்டு விண்ணப்பதாரர் அல்லது ஜாமீன் தாரராகவோ கையெழுத்துட்டு இருந்தால் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அந்த கடனை திரும்ப செலுத்த வேண்டிய முழு பொறுப்பும் உங்களுக்கு உண்டு.
தனிநபர் கடன் போன்ற எதையும் அடமானம் வைக்காமல் வாங்கக்கூடிய கடன்களுக்கு வாரிசுகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மாட்டார்கள். இதுபோன்ற சூழல்களில் வங்கிகள் அந்த கடன்களை வாரா கடன்களாக அறிவித்து விடும். இல்லை அதற்கு காப்பீடு இருந்தால் காப்பீடு தொகை மூலம் அதனை ஈடு கட்டிக் கொள்ளும். எனவே உங்களுடைய மறைந்த தந்தையோ, தாயோ வங்கியில் தனி நபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு போன்ற கடன்களை வைத்திருக்கும் போது நீங்கள் அதை திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு ஏற்படாது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications