உங்கள் வீட்டில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தினால், இது உங்களுக்கு மிக முக்கியமான தகவல். மத்திய அரசு மிகவும் தெளிவான அறிவிப்பை நாடு முழுவதும் இருக்கும் மக்களுக்கு அறிவித்துள்ளது, அனைத்து எல்பிஜி நுகர்வோரும் ஆதார் அட்டையுடன் e-KYC முடிக்க வேண்டும்.
இதைச் செய்யாவிட்டால், எல்பிஜி சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானிய வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்வதை நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. e-KYC முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் விநியோகம் தொடரும் என்றாலும், மானியம் மட்டும் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் மானியத்திற்காக கேஸ் ஏஜென்சிக்குச் சென்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. இப்போது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் e-KYC முடிக்கலாம். சில நிமிடங்களில் முடிந்துவிடும்.
வீட்டில் இருந்து எப்படி e-KYC செய்வது?
முதலில் உங்கள் போனில் pmuy.gov.in/e-kyc.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும். அங்கு தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
பிறகு உங்கள் கேஸ் நிறுவனத்தின் (Indane, HP Gas, Bharat Gas) அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்து நிறுவவும். அதேபோல Play Store-இலிருந்து Aadhaar FaceRD ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.
இந்த ஆப்பில் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்க்கவும். வெற்றிகரமாக முடிந்ததும் உங்கள் எல்பிஜி e-KYC முடிந்துவிடும். எந்த காகித ஆவணமும் தேவையில்லை.
ஸ்மார்ட்போன் இல்லையென்றால், படிகள் புரியவில்லையென்றால் அல்லது முக ஸ்கேன் வேலை செய்யவில்லையென்றால், அரசின் இலவச டோல்ஃப்ரீ எண்ணுக்கு 1800 2333 555 அழைக்கலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள கேஸ் விநியோகஸ்தரை நேரில் சந்தித்து உதவி பெறலாம்.
உஜ்வலா திட்ட பயனாளர்கள் கவனிக்கவும்
உஜ்வலா யோஜனா மூலம் கேஸ் இணைப்பு பெற்றவர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும். அரசு 8-ஆவது மற்றும் 9-ஆவது ரீஃபில் சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியம் அளிக்கிறது. இந்த மானியம் e-KYC முடிந்திருந்தால் மட்டுமே வரும். e-KYC செய்யாவிட்டால், 7-ஆவது ரீஃபிலுக்குப் பிறகு மானியம் நின்றுவிடும். கேஸ் சிலிண்டர் வந்தாலும், ரூ.300 மானியம் கிடைக்காது.


Click it and Unblock the Notifications