சென்னை: சொத்து பிரச்சினைகள் ஒற்றுமையாக வளர்ந்த சகோதர சகோதரிகளை கூட பிரித்து விடுகின்றன. சில சமயங்களில் இந்த சொத்து பிரச்சினைகள் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன.
பெற்றோர் தாங்கள் இருக்கும் போதே சொத்துக்களை சுமூகமாக பிரித்து பிள்ளைகள் பெயரில் எழுதி வைப்பது அல்லது யாருக்கு சொத்து எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை உயிலாக எழுதி வைப்பது ஆகியவை எதிர்காலத்தில் பிள்ளைகள் இடையே பிரிவினையை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். சொத்து பிரிப்பது அல்லது ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுவதில் முக்கியமான நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

உயில்: ஒரு நபர் தனக்கு பின்னர் தன்னுடைய சொத்து யாருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே விருப்பத்தின் பேரில் எழுதி வைக்கும் ஆவணம் தான் உயில். இது அந்த நபர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருக்க வேண்டும், பூர்வீக சொத்தாக இருக்க கூடாது. தன்னுடைய சம்பாத்தியத்தில் கிடைத்த சொத்துகள் தனது இறப்புக்கு பின்னர் எந்த சிக்கலும் இல்லாமல் தனக்கு பிடித்தவருக்கு செல்ல வேண்டும் என சுயநினைவோடு எழுதி வைப்பார். தனது வாரிசுகளுக்கு தான் சொத்தை எழுதி வைக்க வேண்டும் என கட்டாயமில்லை, நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றுக்கு கூட எழுதி தர முடியும்.
பாகம் பிரித்தல்: தந்தை வழியே வந்த சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்து எழுதி தருவது தான் பாகப்பிரிவினை ஆகும். குடும்ப சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்த்து பேசி , அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தின் அதிகாரப்பூர்வ வாரிசுகளின் சம்மதத்தோடு சொத்தினை பிரிப்பது ஆகும். இந்த முறையில் சொத்து பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாரிசுகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டு விடும். உடன்பாடு ஏற்பட சில சமயம் ஊர் பெரியவர்களை வைத்து மத்தியஸ்தம் செய்வதை நாம் கிராமங்களில் பார்க்க முடியும், சிலர் இதனை ஏற்காமல் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்கின்றனர்.
தான பத்திரம்: உறவுகளுக்குள் சொத்து உரிமையை மாற்றி தருவது தான் தான பத்திரம் என அழைக்கப்படுகிறது. தந்தை பிள்ளைகளுக்கும் அல்லது சகோதரர்கள் சகோதரிக்கும், சகோதரி சகோதரருக்கும் என ஒரு சொத்தின் உரிமையை மாற்றம் செய்து தர முடியும். நெருங்கிய குடும்ப உறவு முறைகளில் இது செய்யப்படுகிறது. பணம் எதுவும் வாங்கி கொள்ளாமல் என் பெயரில் இருக்கும் சொத்தின் உரிமையை மற்றவருக்கு மாற்றி தருவதே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
உயில், தான பத்திரம், பாகப் பிரிவினை இவை அனைத்தையும் நாம் பதிவு துறையில் ஆவணமாக பதிவு செய்துவிட வேண்டும். அப்போது தான் அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications