இந்திய நிதித்துறை குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பும் புகார்களை முறையாகவும், விரைவாகவும் தீர்க்கும் வண்ணம் புதிய குறைதீர்க்கும் கட்டமைப்பைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி உருவாக்கியது. பிரதமர் கைகளால் துவக்கிவைக்கப்பட்ட இந்த Integrated Ombudsman Scheme மூலம் வாடிக்கையாளர் வங்கிகள், பேமெண்ட் சர்வீஸ் ஆப்ரேட்டர் மற்றும் NBFC அமைப்பு குறித்துப் புகார்களை ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.
சரி ஒரு சாமானிய மக்கள் Integrated Ombudsman Scheme மூலம் எப்படி ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிப்பதற்கான வழிமுறையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி உருவாக்கிய Integrated Ombudsman Scheme மிக முக்கியமான நோக்கம் 'One Nation-One Ombudsman தான், நிதி துறையைச் சார்ந்த அனைத்து புகார்களையும் ஓரே இடத்தில் பதிவு செய்து அதற்கான தீர்வை விரைவாகவும், முறையாகவும் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் தங்களின் புகாரை டிராக் செய்வது மட்டும் அல்லாமல் புகாருக்கான பதிலையும் இத்தளத்தில் பெற முடியும்.
எளிய வழிமுறை
இதேபோல் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதால் கடுமையான வழிமுறைகள் இருக்கக் கூடாது என முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால் எளிதாகப் புகார் அளிக்கும் வசதியை ரிசர்வ் வங்கி 'One Nation-One Ombudsman திட்டத்தின் மூலம் கொண்டுள்ளது.
4 வழியில் புகார் அளிக்கலாம்
Integrated Ombudsman Scheme மூலம் பல வழிகளில் புகார் அளிக்க முடியும், உதாரணமாக https://cms.rbi.org.in தளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம் அல்லது CRPC@rbi.org.in என்ற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலம் புகாரை பதிவு செய்யலாம், இல்லையெனில் 14448 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்குப் புகார் அளிக்கலாம். படிவம் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் சண்டிகரில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் Centralised Receipt and Processing Centre கடிதம் மூலம் புகார் செய்யலாம்.
ஆன்லைன் மூலம் புகார் செய்வது எப்படி
சரி ஆன்லைன் மூலம் புகார் செய்வது எப்படி என்பதை முழுமையாகப் பார்ப்போம்.
1. https://cms.rbi.org.in என்ற தளத்திற்குச் சென்று 'File A Complaint' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் அதன் பின்பு கொடுக்கப்பட்டு உள்ள Captcha-வை சரியாக டைப் செய்து உள் நுழைய வேண்டும்.
2. பெயர் மற்றும் மொபைல் எண்-ஐ கொடுத்து நுழைந்த பின்பு எந்த அமைப்பு ( வங்கிகள், பேமெண்ட் சர்வீஸ் ஆப்ரேட்டர் மற்றும் NBFC ) குறித்து நீங்கள் புகார் அளிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. அமைப்பை தேர்வு செய்த பின்பு, தத்தம் அமைப்பிடம் கொடுத்த புகாரின் நகல் அல்லது படிவத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. மேலும் கார்டு நம்பர், கடன் அல்லது வைப்பு நிதி கணக்கு விபரங்கள் ஆகியவற்றைப் புகார் அளிக்கச் சமர்ப்பிக்க வேண்டும்.
5. இதைத் தொடர்ந்து புகாரின் வகையைச் தேர்வு செய்ய வேண்டும், அதைத் தொடர்ந்து துணை பிரிவைச் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக லோன் - ஹோம் லோன்
6. புகாரின் முழுமையான விபரத்தைப் பதிவு செய்து, பிரச்சனைக்கூறிய தொகை மற்றும் அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பதிவிட வேண்டும்.
7. உங்கள் புகாரை மறு ஆய்வு செய்து சமர்ப்பித்தால் போதும். வேலை முடிந்தது, வேண்டுமெனில் புகார் படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications