சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டு இருக்கிறது . சம்பளதாரர்கள் பலரும் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் நடைமுறைகளை தொடங்கி இருக்கின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
அதில் முக்கியமானது வாடகைக்கு குடியிருப்பவர்கள் தங்களுடைய வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மட்டும் இல்லாமல் வீட்டு வாடகை அலொவென்சையும் வழங்குகின்றன. நமக்கு இந்த வீட்டு வாடகை அலொவென்சுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது.

நாம் வேலை செய்யும் நிறுவனங்களிடம் வீட்டு வாடகைக்கான ரசீதை வழங்க வேண்டும். ஒரு நிதியாண்டில் நாம் செலுத்தக்கூடிய வாடகை மொத்த மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் நம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட்டு ரசீதினை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிடத் தவறினால் நமக்கு வீட்டு வாடகைக்கான அலொவென்சுக்கு கிடைக்க வேண்டிய வருமான வரி விலக்கு கிடைக்காமல் போகலாம்.
ஒரு நிதியாண்டில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டு வாடகை செலுத்தி இருக்கிறீர்கள் ,உங்களுடைய சம்பளத்தில் House Rent Allowance என ஒரு பிரிவு தனியாக இருக்கிறது என்றால் நீங்கள் கட்டாயமாக உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை குறிப்பிட்டு வீட்டு வாடகைக்கான ரசீதையும் சமர்ப்பித்தாக வேண்டும். அந்த ரசீதில் வீட்டு உரிமையாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக வீட்டு வாடகையை தவறாக குறிப்பிட்டு போலியான பான் எண்களை உள்ளிடுவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் . இவ்வாறு போலியான பான் எண்ணை வழங்கினால் வருமான வரி துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்பதோடு மட்டுமில்லாமல் வீட்டு வாடகைக்காக வழங்கப்படக் கூடிய வருமான வரி விலக்கும் முழுவதுமாக நீக்கப்படும்.
பழைய வரி நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகை அலொவென்சுக்கு வாடகை ரசீதை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நீங்கள் பழைய வரி நடைமுறையை பின்பற்றுகிறீர்கள் என்றால் வீட்டு வாடகை வருமான வரி விலக்கு பெறுவதற்கு வாடகை ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். புதிய வரி நடைமுறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த விலக்கு இல்லை என்பதால் அவர்கள் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஒரு வேளை வீட்டு வாடகை மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது என்றால் வாடகையில் 10 சதவீத தொகையை டிடிஎஸ்-ஆக கழித்து நீங்கள் வீட்டு உரிமையாளரின் பெயரில் வருமான வரி துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டு உரிமையாளர் பின்னர் அதனை வருமானவரித் துறையிடமிருந்து கணக்கு காட்டி பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு வருமானவரி படிவத்தில் வீட்டு வாடகை தொடர்பான விவரங்களை குறிப்பிடும் போது பின்வரும் விவரங்களை சேர்க்க வேண்டும்.
1. வேலை செய்யும் இடம்
2. உங்களுக்கு கிடைத்த வீட்டு வாடகை அலொவென்ஸ்
3. உண்மையில் நீங்கள் செலுத்திய வாடகை
4. ஊதிய விவரங்கள்
5. அடிப்படை சம்பளம்
மேலே கூறிய இந்த விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு படிவத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications