தமிழ்நாடு அரசின் சுகாதார துறையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் எனப்படும் எம்ஆர்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு 2 பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.
தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என தெரிவித்திருக்கும் எம்ஆர்பி யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம், கல்வி தகுதி என்ன, சம்பளம் எவ்வளவு என்பன உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

சம்பளம் எவ்வளவு: எம்ஆர்பி வெளியிட்டு இருக்கக்கூடிய நோட்டிஃபிகேஷனில் பே மேட்ரிக்ஸ் லெவல் 8இன் கீழ் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு 2 பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 19 ,500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 71 , 900 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது . மொத்தம் 1429 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. ஆண்கள் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்யலாம்.
பணியிடங்கள்: பொதுப் பிரிவில் 426 பேருக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் 364 பேருக்கும் வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் இஸ்லாமியர்களுக்கு 48 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு 275 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. எஸ்சி பிரிவினருக்கு 250 பணியிடங்களும் எஸ்சி பிரிவிலேயே அருந்ததியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 48 பணியிடங்களும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 24 பணியிடங்களும் என மொத்தமாக 1429 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன .
வயது வரம்பு என்ன?: இந்த பணிகளுக்கு பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் பதினாறும் 16ஆம் தேதிகள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்களுக்கு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தான் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது . குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி தகுதி என்ன: கல்வி தகுதி என பார்க்கும்போது 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,அதில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். அதேபோல பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று இருக்க வேண்டும். பொது சுகாதார இயக்குனரகத்தின் இரண்டு ஆண்டுகளுக்கான மல்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் அல்லது ஹெல்த் இன்ஸ்பெக்டர் அல்லது சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு: இவர்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு நடத்தப்படும் .அடுத்ததாக கணினி அடிப்படையில் எழுத்து தேர்வு நடத்தப்படும் இது இரண்டு மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல்களை https://tnmrbhi25.onlineregistrationform.org/MRBHI/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications