Standard of Living vs Quality of Life எது முக்கியம்? – தைரோகேர் வேலுமணி அளிக்கும் அற்புதமான விளக்கம்

இன்றைய காலகட்டத்தில் நேரம் காலம் பார்க்காமல் பலரும் உழைப்பதை காண முடிகிறது. குடும்பம், வேலை, படிப்பு இஎம்ஐ செலுத்த வேண்டும், வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு பொறுப்புகளை போட்டு மனதில் திணித்துக் கொண்டு அதற்காக பணத்தை தேடி ஓடுகிறோம்.

இவ்வாறு நாம் ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கக் கூடிய பணம் நமக்கு என்ன மாதிரியான வாழ்க்கையை கொடுக்கிறது நம்முடைய வாழ்க்கையை தரமானதாக மாற்றுகிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வேலுமணி மிகச்சிறந்த ஒரு விளக்கத்தை தந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Standard of Living vs Quality of Life எது முக்கியம்? – தைரோகேர் வேலுமணி அளிக்கும் அற்புதமான விளக்கம்

நம்முடைய வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை இரண்டு விதங்களில் நாம் கண்டறிந்து விட முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் வேலுமணி. இந்த இரண்டு முறைகளிலும் எது நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதையும் அவர் விளக்கம் தந்தார். முதலில் Standard of living , இரண்டாவதாக Quality of life இந்த இரண்டிற்குமான வித்தியாசம் எது , எது இதில் தரமான வாழ்க்கை என கூறியுள்ளார்.

Standard of living என்பது மிகப்பெரிய வீட்டில் வசிப்பது. அனைத்து வசதிகளும் நிறைந்த வீட்டில் குடும்பத்துடன் வசிப்பது , பெரிய காரில் சென்று வருவது, நமக்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று வருவது, நண்பர்களோடு பிடித்த இடங்களுக்கு சென்று வருவது, குழந்தைகளை அதாவது மகனோ அல்லது மகளோ நாம் இருக்கும் பகுதியிலேயே பெரிய பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வைப்பது. இது தான் Standard of living என கூறுகிறார்.

Quality of life உங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டிய அளவுக்கு எந்த ஒரு கடனும் இல்லை, உங்களுடைய வருமானத்திற்கு உட்பட்டு வாழ்க்கையை வாழ்கிறீர்கள், கணவன் மனைவி இருவருமே தங்களுக்கென நேரத்தை செலவு செய்கிறீர்கள், தேவையில்லாமல் பணத்திற்காக ஓட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு என அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்து அவர்களை அன்புடன் பராமரிக்கிறீர்கள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள். இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் மன உறுதி பெற்றவர்களாகவும் , வெற்றியாளர்களாகவும் மாறுகின்றனர் என கூறுகிறார்.

கோவையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் நோயறிதல் பரிசோதனை நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார். இரத்த பரிசோதனை குறிப்பாக தைராய்டு சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனைகளை லட்சக்கணக்கானவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்த்த பெருமை தைரோகேர் நிறுவனத்தை சாரும். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.

அவ்வப்போது சமூகம் சார்ந்தும் , வாழ்க்கை சார்ந்தும் , தொழில் தொடங்கி நடத்துவது சார்ந்தும் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைவருக்கும் பாடமாக அமைகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+