இன்றைய காலகட்டத்தில் நேரம் காலம் பார்க்காமல் பலரும் உழைப்பதை காண முடிகிறது. குடும்பம், வேலை, படிப்பு இஎம்ஐ செலுத்த வேண்டும், வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு பொறுப்புகளை போட்டு மனதில் திணித்துக் கொண்டு அதற்காக பணத்தை தேடி ஓடுகிறோம்.
இவ்வாறு நாம் ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கக் கூடிய பணம் நமக்கு என்ன மாதிரியான வாழ்க்கையை கொடுக்கிறது நம்முடைய வாழ்க்கையை தரமானதாக மாற்றுகிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வேலுமணி மிகச்சிறந்த ஒரு விளக்கத்தை தந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்முடைய வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை இரண்டு விதங்களில் நாம் கண்டறிந்து விட முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் வேலுமணி. இந்த இரண்டு முறைகளிலும் எது நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதையும் அவர் விளக்கம் தந்தார். முதலில் Standard of living , இரண்டாவதாக Quality of life இந்த இரண்டிற்குமான வித்தியாசம் எது , எது இதில் தரமான வாழ்க்கை என கூறியுள்ளார்.
Standard of living என்பது மிகப்பெரிய வீட்டில் வசிப்பது. அனைத்து வசதிகளும் நிறைந்த வீட்டில் குடும்பத்துடன் வசிப்பது , பெரிய காரில் சென்று வருவது, நமக்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று வருவது, நண்பர்களோடு பிடித்த இடங்களுக்கு சென்று வருவது, குழந்தைகளை அதாவது மகனோ அல்லது மகளோ நாம் இருக்கும் பகுதியிலேயே பெரிய பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படிக்க வைப்பது. இது தான் Standard of living என கூறுகிறார்.
Quality of life உங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டிய அளவுக்கு எந்த ஒரு கடனும் இல்லை, உங்களுடைய வருமானத்திற்கு உட்பட்டு வாழ்க்கையை வாழ்கிறீர்கள், கணவன் மனைவி இருவருமே தங்களுக்கென நேரத்தை செலவு செய்கிறீர்கள், தேவையில்லாமல் பணத்திற்காக ஓட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு என அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்து அவர்களை அன்புடன் பராமரிக்கிறீர்கள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள். இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் மன உறுதி பெற்றவர்களாகவும் , வெற்றியாளர்களாகவும் மாறுகின்றனர் என கூறுகிறார்.
கோவையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் நோயறிதல் பரிசோதனை நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார். இரத்த பரிசோதனை குறிப்பாக தைராய்டு சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனைகளை லட்சக்கணக்கானவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்த்த பெருமை தைரோகேர் நிறுவனத்தை சாரும். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.
அவ்வப்போது சமூகம் சார்ந்தும் , வாழ்க்கை சார்ந்தும் , தொழில் தொடங்கி நடத்துவது சார்ந்தும் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைவருக்கும் பாடமாக அமைகின்றன.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications