இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பயணமாக ரயில் பயணங்கள் தான் இருக்கின்றன . குறிப்பாக சாமானிய மக்களை பொருத்தவரை குடும்பத்தினரோடு ஓரிடத்திற்கு சென்று வருவதற்கு குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணத்தை அளிப்பவை ரயில்கள்தான்.
கிறிஸ்துமஸ் விடுமுறை , புத்தாண்டு ,பொங்கல் என அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விடுமுறைகள் வர இருக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்காகவும் விடுமுறையை கழிப்பதற்காகவும் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்வார்கள்.

தற்போது ரயில்களில் டிக்கெட் எடுக்கும் போது ஐஆர்சிடிசி செயலியில் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்க்கப்பட்டிருப்பது கட்டாயம். அப்படி இருந்தால் தான் டிக்கெட்டே முன்பதிவு செய்ய முடியும். இத்தகைய சூழலில் குழந்தைகளுடன் ரயில்களில் பயணம் செய்யும்போது ஐஆர்சிடிசி- யின் குழந்தைகளுக்கான டிக்கெட் பாலிசி குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
வழக்கமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணங்களின் போது டிக்கெட் தேவை இல்லை. எனவே பெற்றோர் மற்றும் பெரியவர்கள் டிக்கெட் இல்லாமலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ரயில்களில் அழைத்து செல்லலாம். ஆனால் அவ்வாறு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்லும் போது அவர்களுக்கு என தனி இருக்கையோ அல்லது பெர்த்தோ கிடைக்காது.
ஒரு வேளை என்னுடைய குழந்தைக்கு 5 வயதுக்குள் தான் ஆகிறது ஆனால் தனியாக இருக்கை வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான கட்டணத்தில் டிக்கெட் எடுத்து கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்குகிறது. எனவே குழந்தைக்கு தனி இருக்கை வேண்டும் என்றால் தனியாக டிக்கெட் எடுத்து கொள்ள வேண்டும்.
அதே போல 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணங்களின் போது குழந்தைகள் கட்டணத்தில் டிக்கெட் எடுக்கப்பட வேண்டும். அப்படி அரை டிக்கெட் எடுத்திருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்கு தனியாக பெர்த் கிடைக்காது. எனவே குழந்தைக்கு தனியாக பெர்த் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான டிக்கெட் எடுக்க வேண்டும்.
அதாவது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுக்கு தனி இருக்கையும் பெர்த்தும் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான டிக்கெட்டை வாங்கியாக வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் பெரியவர்களைப் போலவே முழு டிக்கெட் கட்டணத்தை செலுத்தி ஆக வேண்டும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தையை அழைத்து சென்று அவர்களுக்கு தனி சீட்டு வேண்டும் என்ற பெற்றோர் கோர முடியாது அப்படி வேண்டும் என்றால் தனி டிக்கெட் எடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த விதியை மீறினால் அபராதம் கூட செலுத்த நேரிடலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications