சென்னை: இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது .பிறந்த குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
பால் ஆதார் அட்டை: ஆதார் அட்டை கொண்டுதான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். பெரியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை பெற்று வைத்திருப்பது கட்டாயம் . ஏனெனில் உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது, உங்கள் குழந்தை பெயரில் அரசின் நலத்திட்டங்களை பெறுவது , உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது என அனைத்திற்குமே ஆதார் அட்டை என்பது கட்டாயம் .

எப்படி எடுப்பது: இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. உங்களுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்துள்ளது அல்லது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை இருக்கிறது ஆனால் இதுவரை ஆதார் அட்டை எடுக்கவில்லை என்றால் அது எப்படி என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.
இ சேவை மையம்: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஆதார் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் . அங்கு இருந்து மட்டுமே குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். நம் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து இ சேவை மையங்களிலும் இந்த சேவை கிடைக்காது . குறிப்பிட்ட சில இ சேவை மையங்களுக்கு மட்டும் தான் அரசுஇந்த அனுமதியை வழங்கியிருக்கிறது.
பெற்றோரின் ஆதார் அட்டை: குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பம் செய்ய செல்லும் பெற்றோரில் யாரேனும் ஒருவருடைய ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் விவரங்களான கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றை சேகரிக்க முடியாது என்பதால் பெற்றோரின் ஆதார் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் குழந்தைக்கான ஆதார் அட்டை என்பது வழங்கப்படும்.
பிறப்பு சான்றிதழ்: உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவதற்காக செல்லும் போது பெற்றோரில் ஒருவரின் ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கே அதன் அடிப்படையில் குழந்தைக்கான முகவரி உள்ளிட்ட விவரங்கள் பூர்த்தி செய்யப்படும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதில் பெயர் தெளிவாக பிழையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அந்த பெயர் தான் ஆதாரிலும் இடம் பெறும்.
60- 90 நாட்களில் ஆதார் அட்டை: இ சேவை ,மையத்தில் குழந்தைக்கான பால் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்து குழந்தையின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வார்கள். இதனை அடுத்து acknowledgement slip என்பதை வழங்குவார்கள். அதில் இருக்கும் குறிப்பு எண்ணை கொண்டு குழந்தைக்கான ஆதார் அட்டை கிடைக்கப்பெற்றதா இல்லையா என்ற விவரத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பம் செய்த 60 முதல் 90 நாட்களுக்குள் UIDAI அமைப்பு முகவரிக்கே அஞ்சலில் ஆதார் அட்டையை அனுப்பிவிடும். அதற்கு முன்னரே உங்களுக்கு அட்டை தேவைப்பட்டால் இ சேவை மையத்திற்கு சென்று பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் அப்டேட்:குழந்தைக்கு 5 வயது முடிந்த உடன் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பித்து கொண்டு ஆதார் அட்டையில் அப்டேட் செய்துவிடுவது நல்லது. இல்லை என்றால் ஆதார் அட்டையே செயலிழக்க கூடும் என்பதை பெற்றோர் நினைவில் கொள்வது நல்லது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications