திடீரென பணத் தேவை ஏற்பட்டு விட்டதா? நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனிலேயே டாப் அப் செய்து கொள்ளலாம். அதாவது கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் செயல்படும் வங்கிகள் இந்த லோன் டாப் அப் வசதியை தருகின்றன. இவ்வாறு டாப் அப் செய்யும் நடைமுறை எளிதானதாகவும், குறுகிய காலத்திலேயே கடன் தொகையை பெற்று தருவதாகவும் இருக்கும்.
வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன்களை நாம் டாப் அப் செய்யலாம். வீட்டினை சீரமைப்பது,கல்வி கட்டணம் ,மருத்துவ செலவு உள்ளிட்ட நிதி தேவைகளுக்காக லோன் டாப் அப் செய்து கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் ஏற்கனவே வாங்கி இருக்கக்கூடிய கடனை சரியான வகையில் திருப்பி செலுத்தி இருந்தால் வங்கிகள் எந்த தயக்கமும் இன்றி உங்களுக்கு கூடுதலான தொகையை கடனாக வழங்கும் . உங்களது கிரெடிட் ஸ்கோர், உங்களது வருமானம் உள்ளிட்ட காரணிகளை வங்கிகள் கவனத்தில் கொண்டுதான் கடனை டாப் அப் செய்ய முடியுமா இல்லையா என்பதை தீர்மானம் செய்யும்.
எவ்வளவு தொகை டாப் அப்பாக பெற முடியும் என்பதை வங்கிகளே முடிவு செய்யும். நடப்பில் உள்ள கடனை நீங்கள் எவ்வாறு செலுத்தி இருக்கிறீர்கள் என்பதை கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
வட்டி விகிதங்களை பொறுத்தவரை ஏற்கனவே நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை விட டாப் அப்பிற்கான வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும்போது இது குறைவானதாக இருக்கும் என வங்கி சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வீட்டு கடன் வாங்கி இருந்தீர்கள் என்றால் உங்களது வீட்டினை புனரமைப்பு செய்வதற்கு டாப் அப் பெற்றுக் கொள்ள முடியும் அல்லது கூடுதலாக ஒரு அறையை கட்டுவது போன்ற விஷயங்களுக்காக உங்களுக்கு டாப் அப் கிடைக்கும்.
மருத்துவ செலவு, கல்வி செலவு போன்றவற்றுக்கு தனிநபர் கடனில் டாப் அப் செய்து கொள்ளலாம். பொதுவாக உங்களது கிரெடிட் ஸ்கோர் 750 க்கும் அதிகமாக இருந்தால் வங்கிகள் தாராளமாக உங்களுக்கு லோன் டாப் அப் செய்வார்கள்.
இது போல லோன் டாப் பெறும்போது அதனை திரும்ப செலுத்தும் காலம், கூடுதல் வட்டி விகிதம், உங்களுடைய தற்போதைய வருமானம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். லோன் டாப் அப் செய்த பின்னர், கூடுதல் இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும் இது உங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications