நேற்று மாலை சென்செக்ஸ், 38,220 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,471 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கியது.
அதிகபட்சமாக 38,579 புள்ளிகளைத் தொட்டு 359 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் எத்தனை பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன? முன்னணி பங்குகளில் எவைகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன? உலக சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,614 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,749 பங்குகள் ஏற்றத்திலும், 709 பங்குகள் விலை இறக்கத்திலும், 156 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 180 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ, என் டி பி சி, க்ராசிம், சன் பார்மா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா மோட்டார்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், ஆர்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (21 ஆகஸ்ட் 2020), ஆசியாவின் வர்த்தகமாகும் அனைத்து பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 1.69 % ஏற்ற்த்திலும், தைவானின் தைவான் வெயிடெட் 2.03 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
20 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.06 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 20 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.61 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.33 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.14 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.