இந்தியாவை சேர்ந்த நானோகேப் நிறுவனம் ஒன்று தங்களது நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது .ஆயுஷ் வெல்னஸ் என்ற நிறுவனம் ஹெர்பல் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 300 ரூபாய்க்கும் கீழ் உள்ளது. இந்த நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய ஒரு பங்கினை பத்து பங்குகளாக பிரிக்க போகிறோம் என அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்க போகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இதற்கான எக்ஸ்-டேட்டாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆயுஷ் வெல்னஸ் லிமிடெட் நிறுவனம் சுமார் 94 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. இந்த நிறுவன ம், தங்களுடைய நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதாவது 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கானது 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்து பங்குகளாக பிரிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி இந்த நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் பங்குகளை பிரிப்பதற்கான ரெக்கார்ட் டேட் ஆகஸ்ட் 5 என்றும் கூறியுள்ளது. எனவே ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த நிறுவனத்தில் யாரெல்லாம் பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த பங்கு பிரிப்பானது பொருந்தும்.
ஆயுஷ் வெல்னஸ் நிறுவனத்தை பொருத்தவரை இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜூலை 31ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இரண்டு சதவீதம் உயர்ந்து 294 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 1000 சதவீதம் லாபத்தை தந்துள்ளது. இதன் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 21 ரூபாய் ,52 வார கால அதிகபட்ச மதிப்பு 313 ரூபாய்.
ஆயுஷ் வெல்னஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவன பங்கின் புக் வேல்யூ 15. 15 ஆகும். நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 8. 6 5 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனப் பங்கு மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே வர்த்தகமாகிறது. இந்த நிறுவன பங்குகளை 100% சில்லறை முதலீட்டாளர்களே வைத்திருக்கின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications