பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த சங்கர் சர்மா

நம் நாட்டில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கி எஃப்டி. ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வதை காட்டிலும் பங்குகளில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதே இதற்கு காரணம். அதேசமயம் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் லாபம் சம்பாதிப்பது இல்லை. பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் பணத்தை இழந்தனர், இழக்கின்றனர்.

சுயவிமர்சனம்
பங்குச் சந்தையில் பெரும்பாலான மக்கள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம்,அவர்கள் தங்களை தாங்களே சுயவிமர்சனம் செய்ய இயலாதவர்கள் என்பதுதான் என்று பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா தெரிவித்தார். எக்ஸ்ப்ளோரிங் மைண்ட்ஸ் பாட்காஸ்டில் பேசுகையில், சங்கர் சர்மா பேசுகையில், பெரும்பாலான மக்கள் தோல்வியடைவதற்கு காரணம் திறமை இல்லாததால் அல்ல, மாறாக கண்ணாடியில் (சுயவிமர்சனம்) பார்க்க முடியாததால்தான்.

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க இதுதான் காரணம்.. உண்மையை  போட்டுடைத்த சங்கர் சர்மா

கட்டுக்கதைகள்
பெரும்பாலான மக்கள் தங்களை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய இயலாதவர்கள். அதனால்தான் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதில்லை. இந்திய முதலீட்டாளர்கள் உடைந்த கருவிகளை கொண்டு செல்வத்தை துரத்துகிறார்கள், யாரும் அதை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. கட்டுக்கதைகளை துரத்தி செல்லும் இந்திய முதலீட்டாளர்கள் பணக்காரர்களாக மாட்டார்கள்.

முதலீடு செய்யும் விளையாட்டு, மற்றவர்களை விட எதிர்காலத்தை சிறப்பாக கணிக்கக்கூடிய ஒரு நபரிடம் உள்ள ஒரு மாய குணத்தின் அடிப்படையில் விற்கப்படுகிறது, இது முட்டாள்தனம். உங்கள் சுய ஒழுக்கம் காலப்போக்கில் நீங்கள் எவ்வளவு பணத்தை குவித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதை தீர்மானிக்கும். இந்தியாவில் அதைப் பற்றி எந்த விவாதமும் இல்லை, பூஜ்யம்.

ஒழுக்கம்
என்னிடம் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, வெளியேறுவதற்கான (சரியான நேரத்தில் பங்குகளை விற்பனை செய்வது) ஒழுக்கத்தை கொண்டிருப்பதும். நான் பணம் சம்பாதிப்பது அதிர்ஷ்டம், உண்மையில் விற்பனை செய்வது மிகவும் அதிர்ஷ்டம்.

ஒரு போர்ட்ஃபோலியோ நீண்ட காலத்திற்கு பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, சந்தையின் சராசரி வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக லாபம் வழங்கும்போது நீங்கள் விற்க வேண்டும். இந்த முறையை காட்ட பல தசாப்தங்களாக போதுமான தரவு உள்ளது. இது ஒரு யூகம் அல்ல, இது ஒழுக்கம்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட் 60 வயதுக்கு பிறகு தனது பெரும்பாலான பணத்தை சம்பாதித்தார். அது உங்கள் செலவுகளுக்கு பணம் செலுத்தபோவதில்லை. நீண்ட கால முதலீடு பரவாயில்லை, ஆனால் ஒழுக்கம் இல்லையென்றால் அது வெறும் கோட்பாடு. 22 வயது இளைஞன் உலகளவில் சிந்திக்கத் தொடங்காவிட்டால் அவன் 62 வயதில்தான் சந்தை வடிவங்களை புரிந்து கொள்வான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+