2022ம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்கு கடுமையான மின் பற்றாக்குறை நிலவியது. இதனையடுத்து இறக்குமதி எரிபொருளை நம்பியிருப்பதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் வாயிலாக மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு வேகப்படுத்தியது.
அப்போது, அந்நாட்டின் வடக்கு பகுதி நகரங்களான மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் வகையில் 100 கோடி டாலர் மதிப்பில் காற்றாலை பண்ணை அமைக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதேசமயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதானியின் இந்த திட்டத்துக்கு அங்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் இதுதவிர, கடந்த நவம்பரில், லஞ்சம் கொடுத்து மின் ஒப்பந்தங்களை பெறுவதாக அதானி மற்றும் பிற நிர்வாகிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதனை அதானி குழுமம் மறுத்தது.
இந்த விவகாரத்தை அடுத்து, அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய தொடங்கியது. மேலும், காற்றாலை திட்டங்களிலிருந்து மின்சார உற்பத்திக்கான செலவு குறித்து அதானி குழுமத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் பிப்.12ம் தேதி வெளியிட்ட கடிதத்தில், காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை இலங்கை அரசு நியமித்துள்ள நிலையில், இலங்கையின் இறையாண்மை மற்றும் அதன் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், அந்நாட்டில் மேற்கொள்ள இருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கின் விலை 3 சதவீதம் உயர்ந்து ரூ.945.95க்கு சென்றது. இருப்பினும் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.42 சதவீதம் குறைந்து ரூ.913.20ஆக சரிந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications