அமெரிக்காவின் பங்குச்சந்தை கண்காணிப்பாளர் அமைப்பான SEC, கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடுத்த வழக்கு, இந்திய பங்குச்சந்தையை அதிர வைத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, SEC மற்றும் FBI, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகி சிரில் கபனஸ் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதில் முக்கியமாகப் பங்குச்சந்தை மோசடி, வயர் மோசடி மற்றும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் திட்டங்களைப் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தையைத் தாண்டி மத்திய மாநில அரசுகளை அதிர வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் காரணமாகக் காலை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் அதிகப்படியாக 20 சதவீதம் வரையில் சரிந்து 2.2 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது. இதன் மூலம் அதானி குழுமத்தின் பங்கு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர்.

ஆனால் அமெரிக்க நீதித்துறையின் வழக்கு, பிடிவாரன்ட் குறித்து கௌதம் அதானி விளக்கம் கொடுத்த நிலையில் அதானி குழுமப் பங்குகள் கணிசமாக மீண்டது. கௌதம் அதானி தனது விளக்கத்தில், எங்களுடைய வர்த்தகத்தில் அனைத்து விதமான விதிமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்பட்டு உள்ளோம், அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அடிப்படையற்றது, அதைக் கடுமையாக மறுக்கிறோம். மேலும் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் 2 மணியளவில் சிறிய அளவில் உயர்ந்தாலும், வர்த்தகம் முடியும் போது மீண்டும் பழைய நிலைக்க திரும்பி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 22.62 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 13.53 சதவீதம் சரிவு
அதானி பவர் - 9.15 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 20.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 18.80 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 10.40 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 9.98 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 7.29 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 11.98 சதவீதம் சரிவு
NDTV - 0.06 சதவீதம் சரிவு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 6.26 சதவீதம் சரிவு
அமெரிக்காவின் பங்குச்சந்தை கண்காணிப்புக் குழு (SEC) கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விவரங்கள் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நள்ளிரவு 3 மணியளவில் வெளியிடப்பட்டதும், இன்று காலை முதல் இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, அதானி குழுமம் இந்தியாவில் மாபெரும் சோலார் திட்டங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற செயல்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த லஞ்ச பணத்தை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கடனிலிருந்து பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கௌதம் அதானி மீது பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது அதானி குழுமத்திற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications