இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக அதானி குழுமம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதானி குடும்பத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் பங்கு மதிப்புகளை உயர்த்தி காட்டி அதானி நிறுவனங்கள் அதிக அளவில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை அடுத்து அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரிவை கண்டன. அதானியின் சொத்து மதிப்பு கூட சரிவடைந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை தந்தது.
இதனிடையே அதானி குழும பங்குகள் சரிவிலிருந்து மீண்டு வர தொடங்கின. கிட்டத்தட்ட ஆறு பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்த அளவுக்கு மீண்டு வந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய இழப்புகளை மீறி லாபத்தில் வர்த்தகமாகின்றன. இதனால் அதானி குழும பங்குகளின் மதிப்பு சந்தை மதிப்பு 200 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த அதானி பவர் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு தற்போது 2.72 லட்சம் கோடிகளாக உள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.6 லட்சம் கோடிகளாக இருந்த நிலையில் தற்போது 3 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.அம்புஜா சிமெண்ட்ஸின் சந்தை மூலதன மதிப்பு ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு 99,000 கோடிகளாக இருந்தது தற்போது அது 1.56 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது.
ஏசிசி நிறுவனத்தின் பங்கு 43,000 கோடியிலிருந்து 48,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.91 லட்சம் கோடிகளாக இருந்து தற்போது 3.94 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.அதானி கிரீன் எனர்ஜியின் சந்தை மூலதனமும் 3.05 லட்சம் கோடியாக இருந்து தற்போது 3.06 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 40%, அதானி பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35 % வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இருப்பினும் அதானி குடும்பத்தின் ndtv நிறுவனத்தின் பங்கு 5.5% சரிவடைந்துள்ளது. அதே வேளையில் அம்புஜா சிமென்ஸ் மற்றும் அதானி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் முறையே 25 % மற்றும் 20% என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
விரைவில் அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டில் சேர்க்கப்படலாம் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனை அடுத்து அதானி என்டர்பிரைசஸின் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்செக்ஸ் இன்டெக்ஸில் சேர்க்கப்பட்டால் இந்த பங்கு மதிப்பு 30% வரை உயரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications