இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் அதானி பவர் நிறுவனம் முதல் முறையாக பங்கு பிரிப்பு (stock split) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக இருந்தாலும் ஜூன் காலாண்டு முடிவில் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது.
அதானி பவர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இன்று அதானி பவர் பங்குளை 1:5 என்ற விகிதத்தில் இந்த பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10-இல் இருந்து ஐந்து பங்குகளாக ரூ.2 வீதம் பிரிக்கப்படும்.

இந்த முடிவை பங்குச்சந்தைக்கு இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் "நிறுவனத்தின் பங்குகளின் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் பங்குகளை மலிவாக்கி சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் 1:5 அடிப்படையில் பங்குகளை பிரிக்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பங்கு சந்தையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு உருவாகும்.
இன்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அதானி பவர் நிறுவனம் நிகர லாபமாக 3,305.13 கோடி ரூபாயை அறிவித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 15.5 சதவீதம் குறைவாகும். இதுவே காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது 27.2 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இக்காலாண்டில் வருவாய் அளவும் 5.7 சதவீதம் குறைந்து 14,109.15 கோடி ரூபாயாக உல்ளது.
மேலும் வாரத்தின் இறுதி நாளான இன்று, வர்த்தகத முடிவில் 3.86 சதவீதம் சரிந்து 565.40 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. மோசமான காலாண்டு முடிவுகள் மூலம் பங்கு பிரிப்பின் எதிரொலி மொத்தமாக மறைந்துள்ளது. இருப்பினும், 2025-இல் இந்த பங்கு இதுவரை சுமார் 10% உயர்ந்துள்ளது மற்றும் கடந்த ஆறு மாதங்களில் 15% அளவுக்கு வளர்ச்சியை அடைந்துள்ளது, மேலும் கடந்த ஒரு மாதத்தில் 2% சரிந்துள்ளது. இதன் P/E விகிதம் தற்போது 16.85 ஆக உள்ளது.
பங்கு பிரிப்பு மற்றும் முதலீட்டாளர் பயன்:
பங்கு பிரிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை மாற்றாமல், வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் தற்போது ரூ.100 மதிப்பில் 10 பங்குகளை வைத்திருந்தால், பங்கு பிரிப்பு நடந்த பின் அவருக்கு 50 பங்குகள் ரூ.20 வீதம் கிடைக்கும், ஆனால் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.1000 என்பதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
இத்தகைய பங்கு பிரிப்பு ஒரு நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை மாற்றாது, ஆனால் திரவத்தன்மையை அதிகரிக்கும். விலை குறையும் காரணத்தால் சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கும். பங்கு பிரிப்புக்கான தேசியை இன்னும் அதான் பவர் அறிவிக்கப்படவில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications