2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் 10 நாட்களில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் விவசாயத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விவசாயக் கடன் மீதான வரம்பை மத்திய அரசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தற்போது அதிகபட்சமாக 3 லட்சம் வரை அளித்து வரும் விவசாயக் கடனை 5 லட்சமாக உயர்த்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவே எந்த நிறுவனங்களின் பங்குகளை எல்லாம் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கினால் அதிக லாபத்தினைப் பார்க்கலாம் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
தனுகா அக்ரிடெக்
கிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்காய்ச்சல்கள், மிச்சிக்டுகள் போன்ற உரங்களைத் தயாரிக்கும் தனுகா அக்ரிடெக் பங்குகளை 2018-2019 நிதி ஆண்டுப் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கினால் அதிக லாபம் அளிக்கும். அதாவது 791 முதல் 800 ரூபாய்க்குள் பங்குகளை வங்கினால் ஒரு மாதத்தில் 869.67 ஒரு பங்கு என லாபம் பார்க்க முடியும்.
பிஐ இண்டஸ்ட்ரீஸ்
ப்ரென்போபோஸ், எத்தியோன், பார்ரட் விவசாயத்திற்கு ஏற்ற பொதுவான மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதில் அதிகக் கவனம் செலுத்தும் பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்குகளையும் 2018-2019 நிதி ஆண்டுப் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கலாம். 1,000 முதல் 1,010 ரூபாய் வரையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 1,044 ரூபாய் வரை ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.
காவிரி சீட்ஸ்
விவசாயத்தின் முக்கியத் தேவையான விதிகளை விற்பனை செய்யும் காவிரி சீட்ஸ் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விதைகள் குறித்துப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 522 முதல் 530 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 575 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.
சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் உரம் நிறுவனமான சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் நிறுவன பங்குளை பட்ஜெட்டிற்கு முன்பு 156 முதல் 160 ரூபாய்க்குள் வாங்கினால் ஒரு பங்கின் விலை 169 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
கொரோமண்டல் இண்டெர்னேஷ்னல் லிமிடெட்
கிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லிகள் உற்பத்தீல் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் கொரோமண்டல் இண்டெர்னேஷ்னல் லிமிடெட்-ம் ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகளை 576 முதல் 580 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 621 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.