மும்பை: தளவாடங்கள் துறையில் செயல்படும் ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் தான் ஆல் கார்கோ லாஜிஸ்டிக்.
இந்த நிறுவனம் 20% ஏற்றத்தில் அப்பர் சர்க்யூட் ஆகி முடிவடைந்துள்ளது. இது பிஎஸ்இ-யில் 130.8 ரூபாயாக முடிவடைந்துள்ளது. சரி ஏன் தீடிரென இந்த ஏற்றம் கண்டுள்ளது இந்த பங்கு விலை. வாருங்கள் அதனை பற்றித் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பங்கு வியாபாரத்தில் ஒரு வர்த்தக தினத்தில், வழக்கத்திற்கு மாறாக பங்குகளின் விலை எல்லை மீறிய அளவில் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதனை கட்டுப்படுத்துவதற்கு அப்பர் சர்க்யூட் ஒன்றை நிர்ணயத்திருக்கிறார்கள். பங்குகளின் விலை திடீரென அதிக அளவில் அதிகரிப்பதால் ஈட்டப்படும் மிதமிஞ்சிய லாபம் அல்லது விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான ஏற்றத்தினை கட்டுப்படுத்த அப்பர் சர்க்யூட் பயன்படுகிறது.
இந்த அப்பர் சர்க்யூட்டை சந்தை குறியீட்டு எண் அடைந்து விட்டால் பங்கு வர்த்தகம் தானாக நின்று விடும்படி, சர்க்யூட் பிரேக்கர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முறையே 10 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 20 சதவீதம் என்று ஏறும்போது அல்லது இறங்கும்போது இது மூன்று நிலைகளில் செயல்படும்.
ஆல் கார்கோ லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமான சாஷி கிரண் ஷெட்டி மற்றும் டேலண்டோஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தானாக முன்வந்து டிலிஸ்ட் செய்வதாக கூறியதை அடுத்து, கார்கோ நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது.
இதன் புரமோட்டார்ஸ் நிறுவனம் 70% பங்குகளையும், வெளி நாட்டு நிறுவனங்கள் 13% பங்குகளையும், என்பிஎஃப்சி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் 3.64% பங்குகளையும் கொண்டுள்ளது. இதே பொதுமக்கள் 10.30% பங்குகளையும், பைனான்ஷியல் நிறுவனங்கள் 0.14% பங்குகளையும் வைத்துள்ளனர்.
ஆக இந்த நிறுவனத்தின் டிலிஸ்ட் பற்றிய முடிவுகள், இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் ஆகஸ்ட் 27 அன்று நடக்கவுள்ள நிலையில், அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்மொழிவுக் கடிதத்தினை சஷி கிரண் ஷெட்டி மற்றும் டேலண்டோஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தனித்தனியாக/ கூட்டாக அல்லது விளம்பரதாரர் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து தங்கள் நோக்கத்தினை வெளிப்படுத்தினர்.