அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு பணமழையை பொழிந்து வருகின்றன. இது அதன் பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றன. ரிலையன்ஸ் பவர் பங்குகள் புதிய சாதனையை எட்டியுள்ளது.பங்கு கடந்த 11 வர்த்தகங்களில் 5 சதவீத உயர்வை எட்டியுள்ளன. இந்த காலகட்டத்தில் இது 71 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. தற்போது ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை ரூ.53.65ஐ எட்டியுள்ளது. ஜனவரி 2018க்குப் பிறகு இந்த அளவு எட்டப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் பவர் பூடானில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளபோவதாக நேற்று அறிவித்தது. இதற்காக நிறுவனம் பூட்டான் அரசாங்கத்தின் ட்ரூக் ஹோல்டிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (DHIL) உடன் ஒரு பெரிய கூட்டாணியை அறிவித்துள்ளது. அங்கு சோலார் மற்றும் நீர் மின்திட்டங்களை உருவாக்கப் போவதாக கூறியது. இது ரிலையன்ஸ் பவர் பங்குகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் உயர்வுக்கு வழிவகுத்தது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் பங்குகள் செப்டம்பரில் குறிப்பிடத்தக்க மீட்சியைக் கண்டன. இது 60% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் பவர் மொத்தம் 5,340 மெகாவாட் திறன் கொண்டது.
ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை தற்போது ரூ.53.64 ஆக உள்ளது. இது இந்தப் பங்கின் புதிய 52 வார உயர்வாகும். இந்தப் பங்கின் 52 வாரங்களில் இல்லாத ரூ.15 உள்ளது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,550 கோடி ஆகும். கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பங்கின் விலை 21% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 81% வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 124 சதவீதம் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான 'ரிலையன்ஸ் குழுமத்தில்' ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் உள்ளன. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எரிசக்தி துறையில் தீவிரமாக உள்ளது. டெல்லியில் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பாதுகாப்பு உற்பத்தியிலும் ஆர்வமாக உள்ளது. மெட்ரோ உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மும்பையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் பங்குகளும் அனில் அம்பானி வசம் உள்ளது. எனவே, வரும் நாட்களில் இந்நிறுவனம் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications