கடந்த சில வாரங்களாகவே நிதித் துறை சார்ந்த பங்குகளானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
இது வங்கியானது பெரியளவில் சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் கடந்த சில தினங்களாகவே வங்கி பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
இது முதலீட்டாளர்களை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கலாம்.
பங்கு பரிந்துரை
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் இந்த பங்கின் இலக்கு விலையாக 115 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இன்று இப்பங்கின் விலையானது ஒரு பங்குக்கு 75 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. ஆக இந்த லெவலில் இருந்து 55% ஏற்றத்தினைக் காணலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
வங்கி வளர்ச்சி அதிகரிக்கலாம்
முன்பை விட டிசிபி வங்கி பங்கின் விலையானது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இதன் அசெட் மதிப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கடன் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இதுவும் அதன் வளர்ச்சியினை ஊக்குவிக்க பயன்படலாம்.
வங்கியின் கவனம்?
இது குறித்து ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், இவ்வங்கியின் சொத்து தரத்தினை மேம்படுத்த செயல்பட்டு வருகின்றது. அதன் தரத்தினை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகின்றது, இதன் வளர்ச்சிக்கான எச்சரிக்கையான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இது டெபாசிட்டுகளை வேகப்படுத்தி வருகின்றது. இது நிகர வட்டி அதிகரிப்பின் காரணமாக வளர்ச்சியினைக் காணலாம்.
நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்
குறைந்த பத்திர வருமானம் காரணமாக வட்டியல்லாத வருமானம் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் பெரியளவில் மாற்றம் காணவில்லை.
எனினும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் இப்பங்கினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications