இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ-வின் மே மாத விற்பனை தரவுகளை தொடர்ந்து இன்று காலை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 52 வார உயர்வு சாதனையை கடந்து வரலாற்று உச்ச விலையை தொட்டு முதலீட்டாளர்களை மன குளிர வைத்துள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4669.80 ரூபாய் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் 2023 ஆம் ஆண்டில் மட்டும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 30.42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜனவரி மாதம் பஜாஜ் ஆட்டோ பங்குகளில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று இந்த முதலீடு 1.30 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். மேலும் 6 மாதத்தில் 25.80 சதவீதமும், ஒரு வருடத்தில் 25.37 சதவீதமும், 5 வருடத்தில் 61.02 சதவீதமும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் உயர்ந்துள்ளது.
இன்று பஜாஜ் ஆட்டோ பங்குகள் வரலாற்று உச்ச அளவீட்டை தொட முக்கியமான காரணம் அதன் மே மாத விற்பனை தரவுகள் தான். பஜாஜ் ஆட்டோ மே 2022ல் 2.75 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில் மே 2023ல் சுமார் 3.55 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் பஜாஜ் ஆட்டோ கடந்த ஒரு வருடத்தில் 29 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ மே மாதத்தில் இரு சக்கர வாகன பிரிவில் 3.07 லட்சம் வாகனங்களையும், வர்த்தக வாகன பிரிவில் 33,590 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. வர்த்தக வாகன பிரிவில் பஜாஜ் ஆட்டோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 107 சதவீத வருடாந்திர விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ பங்குகள் அக்டோபர் 2022 முதல் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது. இந்தியாவின் கடுமையான போட்டி மிகுந்த ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்திருப்பதும், புதிய வாகனங்களை வாங்க செய்வதும் மிகவும் கடுமையான விஷயம். இதில் அசத்தும் பஜாஜ் ஆட்டோ சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு உடன் வளர்ச்சி அடைந்து வருகிறது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications