ஒரு வருடத்தில் 53% உயரப்போகும் 5 வங்கி பங்குகள்.. வாங்குவதற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஆய்வாளர்கள்.!!

கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. மற்ற துறை பங்குகளுடன் ஒப்பிடுகையில், பங்குச் சந்தை சரிவின் போது வங்கிப் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. இந்த பின்னணியில், சந்தை வல்லுநர்கள் சில தனியார் துறை வங்கி பங்குகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்தப் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் 53% லாபம் தரும் என்று கணித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக பங்குச் சந்தையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. சந்தை சரிவின் போது வங்கிப் பங்குகள் பெரும் இழப்பை சந்திக்கும் என்று சில முதலீட்டாளர்கள் கணித்திருந்தனர். எனினும், அதற்கு மாறாக சரிவின் போது மற்ற துறை பங்குகளுடன் ஒப்பிடுகையில், வங்கி பங்குகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் நாட்களில் வங்கிப் பங்குகள் சிறப்பாகச் செயல்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்தில் 53% உயரப்போகும் 5 வங்கி பங்குகள்.. வாங்குவதற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஆய்வாளர்கள்.!!

அடுத்த ஓராண்டில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய சில வங்கிப் பங்குகளைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பங்குகள் ரூ. பயனடையலாம் என 53 சதவீதம் வரை உயரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

CSB வங்கி: CSB வங்கியின் சமீபத்திய சராசரி மதிப்பெண் 8 ஆகும். இரண்டு ஆய்வாளர்கள் பங்குக்கு வலுவான வாங்குதல் மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு வரும் காலத்தில் 53% அல்லது அதற்கும் அதிகமான லாபத்தை அளிக்கும் என்று கூறியுள்ளனர்.

HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தற்போது சராசரி மதிப்பெண் 7 ஆக உள்ளது. 39 சந்தை வல்லுநர்கள் இந்த பங்கிற்கு வாங்க மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். அடுத்த ஓராண்டில் இந்தப் பங்கு 45%க்கும் மேல் லாபத்தைக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடா பங்கு சமீபத்திய சராசரி மதிப்பெண் 10 ஆகும். 31 ஆய்வாளர்கள் பங்குக்கு வாங்க மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த பங்கு 38%க்கும் மேல் லாபம் தரக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி: ஆக்சிஸ் வங்கி பங்கின் தற்போதைய சராசரி மதிப்பெண் 9 ஆகும். 40 ஆய்வாளர்கள் பங்குக்கு வாங்க மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த பங்கு வரும் நாட்களில் 37% அதிகரிக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி: அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சமீபத்திய சராசரி மதிப்பெண் 9 ஆக உள்ளது. மொத்தம் 39 ஆய்வாளர்கள் பங்குக்கு வாங்க மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த வங்கிப் பங்குகள் அடுத்த ஒரு வருடத்தில் 34.5% வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+