மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி திரும்பிய இந்திய பங்குச்சந்தை!! நாளைக்கு மட்டும் இது நடந்தா போதும்!!

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2ஆவது நாளாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் வாகனத் துறை பங்குகளின் எழுச்சியால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தன.

செப்டம்பர் 17, 2025 அன்று, மும்பை பங்குச் சந்தையின் (BSE) 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 262.74 புள்ளிகள் அதிகரித்து 82,643.43 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி குறியீடு 85.25 புள்ளிகள் உயர்ந்து 25,324.35 ஆக நிறைவடைந்தது.

மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி திரும்பிய இந்திய பங்குச்சந்தை!! நாளைக்கு மட்டும் இது நடந்தா போதும்!!

அமெரிக்கா இந்தியா இடையே நடைபெறும் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தன. இந்தப் பேச்சுவார்த்தையில், விரைவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினரும் உறுதியாக இருப்பதால் மேற்கொண்டு பங்குச்சந்தை உயரும் என்றே கணிக்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பெரும்பான்மையான உரிமை தொடரும் என நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து, பொதுத்துறை வங்கிப் பங்குகளின் ஏற்றம் மூன்றாவது நாளாக நீடித்தது. இதில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய முக்கிய நிறுவனங்களாகும்.

வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் குறியீடுகள் ஒரு சதவீதம் வரை உயர்ந்தன. ஆனால், FMCG, மெடல், மருந்து மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்கள் துறைப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஜிண்டால் ஸ்டீல், கிளாண்ட் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன. பரந்த சந்தையைப் பொறுத்தவரை, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் இரண்டும் முன்னேற்றம் கண்டன.

நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.7 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு சற்று ஏற்றம் கண்டது. மிட்கேப் பிரிவில், KPIT டெக்னாலஜிஸ், கொச்சின் ஷிப்யார்ட், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் ஆகியவை 4 சதவீதம் வரை லாபம் ஈட்டின.ஸ்மால்கேப் பிரிவில், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ், IFCI, சென் டெக்னாலஜிஸ், டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) ஆகிய நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன.

அமெரிக்கா மத்திய வங்கியின் ஆலோசனை கூட்டம் அந்நாட்டு நேரப்படி இன்று முடிகிறது. இதில் வட்டி குறைப்பு தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப நாளை பங்குச்சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை காணலாம். இது அடுத்து பங்குச்சந்தையின் போக்கையே தீர்மானிக்க போகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+