பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. பங்குகள் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் பொறுமை தேவை.
பொதுவாக நல்ல லாபத்தை தரக்கூடிய மல்டிபேக்கர் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொட்டி கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றுதான் பாரத் ரசாயன். ரசாயனங்கள் துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பாரத் ரசாயன் லிமிடெட் நிறுவனம் வேளாண்-வேதியியல் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தர பூச்சிக்கொல்லிகள் மற்றும் இடைநிலைகளை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 1989ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெரிய அனுபவத்துடன் இத்துறையில் முன்னணியில் உள்ளது.
தொடர்ந்து லாபம் ஈட்டுவது, வருவாயில் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் முன்னேற்றம் போன்ற முதலீட்டாளர்கள் விரும்பும் அம்சங்கள் இந்நிறுவனத்தில் காணப்படுவதால் இது முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் பங்குகளில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் பாரத் ரசாயன் பங்கு முதலீட்டாளர்களுக்கு 28,014 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2009ல் இப்பங்கின் விலை ரூ.9.40 என்ற அளவில் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.11,096 என்ற அளவில் உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.81 கோடியாக பெருகியிருக்கும். நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 107.74 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.09 லட்சமாக உயர்ந்திருக்கும்.
குறுகிய கால அடிப்படையில் இப்பங்கின் விலை ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது. கடந்த ஓராண்டில் பாரத் ரசாயன் நிறுவன பங்கின் விலை 28.75 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 2.50 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 8.91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் பாரத் ரசாயன் நிறுவனத்தின் நிகர லாபம் 164.73 சதவீதம் உயர்ந்து ரூ.40.53 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவன பங்கின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.36.85லிருந்து ரூ.97.54ஆக உயர்ந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications