பொதுவாக நிறுவனங்கள் தங்களது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) நிதி திரட்டுகின்றன. ஐபிஓ என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது, ஐபிஓ வெளியிட்ட நிறுவனத்துக்கு தேவையான நிதியும் கிடைக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது.
சமீப ஆண்டுகளாக நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஐபிஓ வாயிலாக ஏராளமான நிறுவனங்கள் நிதி திரட்டின. இந்த ஆண்டிலும் அதிகளவில் ஐபிஓக்கள் நடைபெறும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு கண்டு வந்தன.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, சர்வதேச புவியியல் பதட்டங்கள் போன்ற காரணங்களால் கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகளுக்கு இருண்ட காலமாக அமைந்தது. இருப்பினும் பங்குச் சந்தைகள் தற்போது சரிவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஐபிஓ-க்கள் வருவது, சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை மதிப்பிடுவதற்கு உதவும். ஐபிஓ-க்கள் வெற்றி பெறும்பட்சத்தில் அடுத்தடுத்து வரும் பங்கு வெளியீடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஐபிஓ சந்தை மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. 2025ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்டும். இதன் மூலம் ஐபிஓவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சர்வதேச சந்தைகளை இந்திய பங்குச் சந்தைகள் முந்தும்.
இந்த ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் 160 நிறுவனங்கள் ஐபிஓவில் களமிறங்கும். மேலும் இந்நிறுவனங்கள் மொத்தம் 5,000 கோடி டாலர் திரட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சார வாகனங்கள் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் அதிகளவில் ஐபிஓவை மேற்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களின் கணிப்பை உறுதி செய்வது போல் பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. உதாரணமாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ தீபாவளியை ஒட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு தரகு நிறுவனமான குரோவ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தனது இருப்பிடத்தை மாற்றியது. இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் தனது ஐபிஓவுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications