ஒரு வருஷத்துல 1 லட்சம் முதலீடு 59 லட்சமாக மாற்றிய ஸ்மால்கேப் நிறுவன பங்கு..!

மும்பை: SME பிரிவை சேர்ந்த ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரே ஆண்டிலேயே 4800 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது. போண்டாடா இன்ஜினியரிங் (Bondada Engineering)என்ற நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஓராண்டு காலத்தில் அவர்கள் எதிர்பாராத அளவிலான லாபத்தை ஈட்டி தந்துள்ளது.

கடந்தாண்டு இந்த நிறுவனத்தில் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது அதன் மதிப்பு 59 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஓ வெளியீடு செய்தது.

ஒரு வருஷத்துல 1 லட்சம் முதலீடு 59 லட்சமாக மாற்றிய ஸ்மால்கேப் நிறுவன பங்கு..!

ஒரு பங்கின் விலை 75 ரூபாய் என்று அளவில் மொத்தம் 1600 பங்குகள் கொண்ட ஒரு லாட்டினை 1.2 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்தது. இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதன் ஐபிஓ விலையை விட பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் 1.2 லட்சம் ரூபாய் செலுத்தி ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது அவர்களின் பணத்தின் மதிப்பு 58.95 லட்சம் ரூபாய் என உயர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 800 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து நாள்தோறும் 5 சதவீதம் என உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி வருகிறது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 3,769 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் 8000 கோடி என்ற நிலையில் இருக்கிறது. 2024ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 804 கோடி, அதில் லாபம் 46 கோடி ரூபாய். இந்த நிறுவன பங்குகளில் 63 சதவீதம் புரமோட்டோர்களிடமும், 36 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது.

அண்மையில் கூட இந்த நிறுவனம் லூமினா கிளீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 575 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பெற்றுள்ளது. மின் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான இந்த திட்டப்பணிகள் மூலம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்று போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போண்டாடா இன்ஜினியரிங் நிறுவனம் கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரதானமாக டெலிகாம் மற்றும் சோலார் எனர்ஜி துறைகளில் செயல்பட்டு வருகிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+